எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை பிப்-23 - நெல்லை மாவட்டத்திலிருந்து லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற தொழிலாளி ஒருவர் அங்கு நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் உயிரிழந்ததாகவும், மேலும் 25க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மசூதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேணடுமென்றும் அவரது உறவினர்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன்கோட்டை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் லிபியா நாட்டில் ஹோண்டாய் கம்பெனியின் மூலம் அந்நாட்டில் டவர்கள் மற்றும் பவர் கிரிடுகள் அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கு திட்ட மேலாளராக பணிபுரிந்து வரும் சங்கரன்கோவில் தாலுகா பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் ஏற்பாட்டில் அங்கு சென்று வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்தனர். இந்நிலையில் சிலதினங்களாக லிபியா நாட்டில் அரசுக்கெதிராக உள்நாட்டு கலவரத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு தகவல் தொடர்பு உள்ளிட்ட எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் எங்கும் செல்ல முடியாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு வந்த கலவரக்காரர்கள் திடிரென அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்போவதாகவும் அங்கு தங்கியிருக்கும் அனைவரும் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு தங்கியிருந்த 25க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். அப்போது அங்கு வெடித்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த சண்முக தேவர் மகன் முருகையா(40), ஆலங்குளம் அருகேயுள்ள நாகல்குளத்தை சேர்ந்த அசோக்குமார்(24), களப்பாகுளத்தை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. மற்றவர்கள் அப்பகுதியிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையே படுகாயமடைந்த முருகையா உயிரிழந்து விட்டதாகவும், மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு செல்போன்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் கடந்த சிலதினங்களாக சாப்பாடு மற்றும் குடிநீர் எதுவும் இல்லாமல் கழிப்பறை நீரை குடித்து உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களை பத்திரமாக மீட்டு செல்ல அரசை வலியுறுத்துமாறும் உறவினர்களுக்குத்தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவர்களிடமிருந்து நேற்று முன்தினம் முதல் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் யாரையும் தொடர்புகொள்ளவில்லையென தெரிகிறது. இதனால் அவர்களது தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே மசூதிக்குள் தஞ்சம் அடைந்திருப்பவர்களை பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் ஜெயராமனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அவரும் அவர்களை மீட்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் முருகையாவிற்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், கலையரசி என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.மகள் கலையரசிக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. மகன் கோபால கிருஷ்ணன் தற்போது 9ம் வகுப்பு படித்துவருகிறார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் கண்ணீர் மல்க கலெக்டரிம் தனது கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு மனுக்கொடுத்த சம்பவம் அனைவருக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.
லிபியாவிற்கு வேலைக்கு சென்றவர்கள் அனைவருமே சமீபத்தில்தான் அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அதுவும் கடன்வாங்கித்தான் வெளிநாடு சென்றுள்ளனர். எனவே அவர்களை மீட்டு தரவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணமும் வழங்கவேண்டுமன வலியுறுத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.