முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், மே. 13 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி இந்தத் தொடரில் முன் னிலை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் பெங்களூர் ராயல் அணி தரப்பில் துவக்க வீரர் கெய்ல் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செ ன்றார். தில்ஷான் மற்றும் கோக்லி இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, எஸ். அரவிந்த் அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லாங்வெல்ட் மற்று ம் கெய்ல் இருவரும் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரங்கத்தில் 55 -வது லீக் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி தரப்பில், வாட்சன் மற்றும் டிராவிட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ராஜஸ்தான் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் டை இழந்து 146 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், 2 வீரர்கள் கா ல் சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டிராவிட் அதிகபட்சமாக, 31 பந்தில் 34 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இறுதியி ல் அவர் அரவிந்த் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலி யன் திரும்பினார். 

அடுத்தபடியாக, துவக்க வீரர் வாட்சன் 29 பந்தில் 34 ரன்னை எடுத்தா ர். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, போத்தா 20 பந்தில் 19 ரன்னையும், ரகானே 10 பந்தில் 17 ரன்னையும், டெய்லர் 13 பந்தில் 13 ரன்னையும் எடுத்தனர். 

பெங்களூர் அணி தரப்பில், முன்னணி பந்து வீச்சாளரான எஸ். அரவிந்த் 34 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, லாங்வெல்ட் மற்றும் கெய்ல் இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

பெங்களூர் அணி 147 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை ராஜஸ்தான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்னை எடுத்தது. 

இதனால் பெங்களூர் அணி ஜெய்பூரில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத் தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற் றியின் மூலம அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

பெங்களூர் அணி தரப்பில் துவக்க வீரர் கெய்ல் அதிரடியாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 44 பந்தில் 70 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்ட ரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். 

அவருக்கு பக்கபலமாக ஆடிய தில்ஷான் 24 பந்தில் 38 ரன்னை எடுத் தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் வார்னே வீசிய பந்தில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவிர கோக்லி 34 பந்தில் 39 ரன்னை எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனா க கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்