முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பான்மையை நிரூபிக்க தயார் - எடியூரப்பா

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,மே.17 - கவர்னர் பரத்வாஜ் விரும்பினால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் கவர்னர் பரத்வாஜ் விரும்பினால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பா.ஜ.க அரசுக்கு பெரும்பான்மை பலமிருப்பதை நிரூபிப்பேன். கவர்னர் மீது எனக்கு அளவில்லா மதிப்பு உண்டு. அவரது வழிகாட்டுதல்படி செயல்படுவேன். அது எனது கடமை என்றார். 

மேலும் கவர்னரிடமிருந்து எந்தவிதமான தொந்தரவையும் எதிர்பார்க்கவில்லை என்றும் மீதமுள்ள 2 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் நம்பிக்கை இருப்பதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் எடியூரப்பா தெரிவித்தார். இந்நிலையில் கவர்னர் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பினார். அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு அவசியமா என்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் கர்நாடகத்திற்கு திரும்பியதும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்