முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஷ்டி மோதலை தவிர்க்க ஆந்திர மந்திரிகள் 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,மே.22 - கோஷ்டி மோதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில காங்கிரஸ் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஜுபல்லி கிருஷ்ணா ராவுக்கும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் டி.கே. அருணாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் தனிதெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ண ராவ் தலைமையில் கத்வால் தொகுதியில் பாத யாத்திரை நடைபெறவிருந்தது. இது தொடர்பாக கிருஷ்ணராவ் கோஷ்டிக்கும் அருணா கோஷ்டிக்கும் மோதல் உருவாகும் நிலை இருந்தது. இதை தடுக்கும் வகையில் மெஹ்பூப்நகர் மாவட்டத்தில் இந்த இரண்டு அமைச்சர்களும் வெவ்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். ஆனால் ராஜீவ் காந்தி நினைவு தின நிகழச்சியில் அமைச்சர் அருணா கலந்துகொள்ள வேண்டியதிருந்ததால் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனி தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 23 நாட்களுக்கு முன்பு மெஹ்பூப்நகர் மாவட்டத்தில் பாத யாத்திரையை கிருஷ்ணராவ் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்