முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஸ்ஸாவில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புவனேஷ்வரம், மே.22 - ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நேற்று ரயில் தண்டவாளம் ஒன்றை குண்டு வைத்து  தகர்த்தனர்.பீகார் மாநிலத்தில் 3 மாவோயிஸ்டு  தீவிரவாத தலைவர்களை பாதுகாப்பு படையினர்  கைது செய்துள்ளனர். இவர்களை விடுதலை  செய்யக்கோரி ஆந்திரா, ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் , சத்தீஸ்கார், பீகார் ஆகிய 6 மாநிலங்களில் 2 நாள் பந்த்திற்கு  மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரிஸ்ஸா மாநிலம்  சுந்தர்கார் மாவட்டத்தில் ரஞ்சேடா மற்றும் ராக்சி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளம் ஒன்றை மாவோயிஸ்டுகள் நில குண்டு வைத்து அதை ரிமோட்கன்ட்ரோல் மூகம் வெடிக்கச்செய்தனர். இதில் அந்த தண்டவாளத்தின் ஒரு நீண்ட பகுதி துண்டிக்கப்பட்டது.

ரூர்கேலாவில் இருந்து 90 கி.மீ.தொலைரில் நடந்த இந்த சம்பவத்தை ரயில்வே பாதுகாப்பு படை  வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆனால் தண்ட வாளம் சேதம் அடைந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. இதன் காரணமாக ரூர்கேலா - கிர்பூர் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குண்டு வெடிப்பு  சம்பவத்திற்கு பிறகு அந்த வழியாக சென்ற ஒரு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ரூர்கேலாவுக்கு  தாதுக்களை எடுத்து செல்லும் ரயில்கள் பாதி  வழியிலேயே நிறுத்தப்பட்டன.

இதனால் ரூர்கேலா உருக்காலைக்கு இரும்பு தாது மற்றும் இதர பொருட்களை கொண்டு  செல்வது  பாதிக்கப்பட்டது. சனாகாத்தி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் இருந்த  பல வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள்  தீ வைத்து கொளுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்