முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்றக்கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சண்டை

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

பழனி, ஜூன்.1 - பழனி நகர் மன்றக்கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டு அடிதடியில் ஈடுபட்டனர். பழனி நகர்மன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நகர் மன்ற துணைத்தலைவர்(தி.மு.க.) ஹக்கீம் சமச்சீர் கல்வியை அ.தி.மு.க. அரசு புறக்கணித்தால் ரூ.200 கோடி மதிப்பிலான பாடப்புத்தகங்கள் வீணாகி உள்ளது என்று பேசினார். அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கணேசன், முருகானந்தம் அய்யர், தனபாக்கியம், சின்னத்தாய் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தி.மு.க. கவுன்சிலர்கள் வேலுமணி உள்பட அனைவரும் சமச்சீர் கல்வியை செயல்படுத்தாத அ.தி.மு.க. அரசை கண்டித்து வெளி நடப்பு செய்தனர். பின்பு 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே சமச்சீர் கல்வி குறித்து தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசனுக்கும் தி.மு.க. கவுன்சிலர் பச்சைமுத்துவிற்கும் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் கட்டிபுரண்டனர். அதைப்பார்த்த நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நகர அ.தி.மு.க. செயலாளர் பரதன், தொகுதி தலைவர் மகுடீஸ்வரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை நகர் மன்றத்தில் மாட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்