எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.21 - தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த சாதனைகளைப்பற்றி அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.10 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாடினார். அரசியல் சமூக, பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஹிலாரி கிளிண்டன் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் பல தடைகளைக் கடந்து முதல்வர் செய்த சாதனைகளையும் அவர் பாராட்டினார். பெரும் வெற்றிக் கதைகளை கொண்ட பெரும் ஆளுமைமிக்க தலைவரான ஜெயலலிதாவுடன் பேசுவதற்கு ஙிஹிலாரி ஆவல் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா நினைவு கூர்ந்தார். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரும் வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்கிறது என்றும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் சேவைகளை 200-10-ல் இந்தியா ஏற்றுமதி செய்தது. 2009-ல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்றும் எதிர்காலத்தில் அமெரிக்க சேவைகளின் இந்திய இறக்குமதி அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் பிரிவில் அமெரிக்கா முதலீடு செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
இதுபோன்ற தொழில்துறைகளில் தமிழ்நாடு - அமெரிக்கா இரு தரப்பும் இணைந்து பணியாற்ற முடியும். இதுகுறித்த கொள்கையை உருவாக்குதல், சிறு மற்றும் மத்திய நிறுவனங்களை பயன்படுத்துதல், உலக சப்ளை சங்கிலி நிர்வாக முறைமையை ஆட்டோமோட்டிவ் துறையில் பலப்படுத்தல் குறித்து முதல்வர் விவாதித்தார்.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள விரிவான வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்யும் 10 சூரிய சக்தி மின்சார பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையும் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசும் அமெரிக்க அரசும் இந்த துறையில் இணைந்து செயலாற்ற முடியும். இத்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அறிவுத்துறையில் - குறிப்பாக தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2011-2020 காலகட்டத்தில் 10 முதல் 12 மில்லியன் பணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்காக உயரும் என்பதால் அது உறுதிபடுத்தப்படும். இது அறிவுத்துறையை மேம்படுத்த தமிழக அரசும், அமெரிக்க அரசும் கைகோர்த்து செயல்பட முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுபோன்ற இணைந்த செயல்திட்டங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
தொழிற்துறை வளர்ச்சியில் சாலைபோக்குவரத்து பெரும்பங்கு வகிக்கின்றது. 2.1 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு 15-20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2020-ம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடுத்துக் கூறினார். சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழக அரசும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட முடியும் என்று முதல்வர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்ற தகவலை ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் செயல்திறனுள்ள தலைமையில் இதுபோன்ற பல பெரிய முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக ஹிலாரி கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் எச்.1.பி விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார். 65 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள ஒதுக்கீட்டை 1 லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்தவேண்டும். விசா விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும், முதல்வர் ஜெயலலிதா ஹிலாரியிடம் பேசினார். இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்தும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழ்வதற்கு முடியாத நிலை குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்த உணர்வை பகிர்ந்து ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கை தமிழர்களின் முகாம்களில் இருந்து விரைவில் சொந்த வீடுகளுக்கு திரும்ப அமெரிக்க அரசு நுட்பமான - ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி திட்டங்களை அறிய அமெரிக்க குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பெரும் சாதனைகளை அறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்கா வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நடைபெற்றது. அமெரிக்கக் குழுவில் துணை அமைச்சர் பாப் பிளேக், உலக பெண்கள் விவகாரத்திற்கான தூதர் மெலன்வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பீட்டர் பர்லேக், சென்னை - அமெரிக்க துணை தூதரகத்தின் ஆண்ட்ரூ டீ சிம்கின், அமெரிக்க அமைச்சகத்தின் துணை தலைமை அலுவலர் ஹியுமா ஆபிதீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
படியில் ஏறிவந்த ஹிலாரி கிளிண்டன்
நேற்று சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் கோட்டையில் ஜெயலலிதாவை சந்திக்க வந்தபோது அவரை பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயின் வாசலில் வரவேற்று லிஃப்ட் மூலம் செல்ல அழைத்தபோது ஹிலாரி கிளிண்டன் படிக்கட்டு வழியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்தார்.
அவரை முதல்வர் ஜெயலலிதா வாசல் அருகே வந்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் தேவந்திரநாத் சாராங்கி மற்றும் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.