முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரேவுடன் பேச்சுநடத்த தயார் - சிதம்பரம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.13 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குறித்து சமூக சேவகர் அன்னா ஹசாரேவுடன் பேச்சுநடத்த தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், லோக்பால் மசோதா குறித்து அன்னா ஹசாரேவுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார். அரசுடன் பேச்சுநடத்துவதும் நடத்தாமல் இருப்பதும் அவருடைய விருப்பம். ஆனால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று சிதம்பரம் தெரிவித்தார். 

இம்மாதம் 14 ம் தேதி டெல்லியில் அன்னா ஹசாரே மேற்கொள்ள இருக்கும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இதை டெல்லி போலீசார்தான் முடிவு செய்வார்கள் என்று அவர் பதிலளித்தார். பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து பாரதிய ஜனதா கட்சியுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா என்று கேட்டதற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சிதம்பரம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்