முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிம் முன்னாள் முதல்வர் சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

கேங்டாக்,ஆக.13 - சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் நெர்பகதூர் பண்டாரி ஊழல் வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  1979 முதல் 1984 வரை இவர் சிக்கிம் மாநில முதல்வராக பண்டாரி இருந்தார். அப்போது குடிநீர் விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் பண்டாரி ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் மீதான தீர்ப்பு 2008 ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சிக்கிம் ஐகோர்ட் முன்னாள் முதல்வர் பண்டாரிக்கு தண்டனையை 6 மாதத்தில் இருந்து ஒரு மாதமாக குறைத்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி உத்தரவுப்படி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்