முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடி தாக்கியதில் பட்டாசு ஆலையின் கட்டிடம் தரைமட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,ஆக.14 - திருமங்கலம் அருகே இடிதாக்கியதில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானது. அதிகாலை நேரமென்பதால் தொழிலாளர்கள் வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. திருமங்கலம் தாலுகா அழகுசிறை கிராமத்தின் அருகே தனியார் பட்டாசு ஆலை அரசு அனுமதியுடன் இயங்கி வந்தது.  இங்கு 50 க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அதிக அளவு பட்டாசுகள் இந்த கிடங்கில் சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைபார்த்த தொழிலாளர்கள் பணி முடித்து வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு நேரத்தில் வாட்ச் மேன் சேகர் மட்டும் இருந்துள்ளார். இதனிடையே அதிகாலை நேரத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதன்காரணமாக பட்டாசு ஆலை தரை மட்டமானது. இந்த பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாசில்தார் மோகன், மண்டல துணை தாசில்தார் சிவராமன், வருவாய் ஆய்வாளர் பிரதாப்சிங், வி.ஏ.ஒ. ஜெயசுதா சிந்து பட்டி எஸ்.ஐ. லாவண்யா வேம்புலு மற்றும் போலீசார் ஆலைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்