முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மண்டல அத்லடிக் போட்டி: தமிழகம் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - ஐதராபாத்தில் நடைபெற்ற தென்மண்டல ஜூனியர் அத்லடிக் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பட்டம் வென்று சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

23வது தென்மண்டல ஜூனியர் அத்லடிக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அணி வீரர், வீராங்கனைகள் மிக அபாரமாக செயல்பட்டு அதிக அளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

மொத்தம் நடைபெற்ற 8 வகையான வயதுப்பிரிவுகளில் 6ல் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறந்த அத்லட்டுகளாக தேர்வு பெற்றனர்.

14 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவு-எம்.எஸ்.அருண், சிறுமியர் பிரிவு-ஏ.பி.ஸ்ரீஜா, 16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவு-பெரில் ஹட்சன், 18 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவு-பிரவீன் முத்துகுமரன், சிறுமியர் பிரிவு -ஆர்.பவித்ரா, 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு ரதீஷ்குமார் ஆகியோர் சிறந்த அத்லட்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதே போல் அணி சாம்பியன் பட்டத்தில் மொத்தம் வழங்கப்பட்ட 8 பிரிவுகளில் 4 பிரிவுகளில் தமிழகம் கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்த போட்டியில் பிரவீன்முத்துக்குமார் 100மீ. ஓட்டத்திலும், பிரேம்குமார் நீளம் தாண்டுதலிலும், ஸ்ரீவித்யா உயரம் தாண்டுதலிலும் புதிய மீட் சாதனை படைத்தனர்.

சாதனை வெற்றியோடு சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில அத்லடிக் சங்க தலைவர் தேவாரம், சென்னை மாவட்ட அத்லடிக் சங்க தலைவர் ஆறுமுகம், மாநில பொருளாளர் ஈஸ்வர்ராவ், இணைசெயலாளர் சி.லதா ஆகியோர் வீரர், வீராங்கனைகளை பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்