எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 11- சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் `ஏ' பிரிவில் நியூ சவுத்வேல்ஸ், மும்பை இந்தியன்ஸ், `பி' பிரிவில் சோமர்செட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. லீக் சுற்றுடன் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வாரியர்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 2009ம் ஆண்டு சாம்பியனான நியூ சவுத்வேல்சையும், மும்பை இந்தியன்ஸ் அணி சோமர்செட்டையும் தோற்கடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்தன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஐ.பி.எல். அணிகளான வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். பிளிஸ்சார்ட்டும், சருல் கன்வாரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அரைஇறுதியில் அரைசதம் அடித்து கைகொடுத்த பிளிஸ்சார்ட் (3 ரன்), துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கன்வாரும் (13 ரன்) வெளியேறினார். அம்பத்தி ராயுடுவும் (22 ரன்) nullநீண்ட நேரம் நிலைக்கவில்லை. இதன் பிறகு ஜேம்ஸ் பிராங்ளினும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். 13.4 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது. இவர்கள் களத்தில் நின்ற வரை மும்பை அணி 150 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவும் (24 ரன், 17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), பிராங்ளினும் (41 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து ரன்அவுட் ஆனது, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. இதன் பிறகு அணியின் ரன்வேகம் ஒரேயடியாக குறைந்து போனது. கடைசி கட்டத்தில் மலிங்கா மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் 2 சிக்சருடன் 16 ரன்கள் விளாசினார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிரடி காட்ட வேண்டிய கடைசி 5 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 140 ரன்கள் இலக்கை நோக்கி கிறிஸ் கெய்லும், தில்ஷனும் பெங்களூர் அணியின் ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் அணியின் ஸ்கோரை தில்ஷன் துவக்கினார். இலங்கையைச் சேர்ந்த தில்ஷன் தனது பங்குக்கு 27 ரன்கள் (20 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில், சக நாட்டவரான மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். ஸ்கோர் குறைவு என்பதாலும், கடினமான ஆடுகளம் என்பதாலும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் நிதானமாக ஆட முயற்சித்தார். அதுவே அவருக்கு எமனாக அமைந்தது. 5 ரன்னில் (12 பந்து, ஒரு பவுண்டரி) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதிரடி நாயகர்கள் பெவியன் திரும்பியதும், பெங்களூர் அணி தடுமாறத் தொடங்கியது. அகர்வாலும் (14 ரன், 19 பந்து), விராட் கோலியும் (11 ரன், 19 பந்து) அடுத்தடுத்த ஓவர்களில் பிடிகொடுத்து வெளியேறினர். அணியை தூக்கி நிறுத்த தவறினார்கள். எதிரணியின் முன்னணி வீரர்கள் சீக்கிரம் வெளியேறியதால், மும்பை அணிக்கு உற்சாகம் பிறந்தது. அதன் தொடர்ச்சியாக பெங்களூர் அணிக்கு மேலும் சில விக்கெட்டுகள் சரிந்தன. ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால், பெங்களூர் அணி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆட்டமும் மும்பை அணியின் கைக்குள் வந்தது. இலக்கை நெருங்க முடியாமல் தவித்த பெங்களூர் அணி இறுதியில் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்களூரில் நடந்த முந்தைய இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் ரன்களை எளிதாக சேசிங் செய்த பெங்களூர் அணியால் சென்னை மைதானத்தில் 139 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் போனது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. பெங்களூர் அணி இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிவரை வந்து தோற்றது. அதற்கு சாம்பியன்ஸ் லீக்கில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பு மறுபடியும் நழுவி போய் விட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ரூ.11.6 கோடியை பரிசுத்தொகையாக தட்டிச்சென்றது. 2வது இடம் பிடித்த பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோற்ற அணிகள் தலா ரூ.2.3 கோடியை பரிசாக பெற்றன. ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், சாம்பியன்ஸ் லீக்கில் பட்டம் வென்றது மும்பை அணிக்கு ஆறுதலாக அமைந்தது. கேப்டன் தெண்டுல்கர், முனாப்பட்டேல், ரோகித் ஷர்மா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகிய நிலையிலும் மும்பை அணி சாதித்திருப்பது கவனிக்கத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களில் ஹர்பஜன்சிங் ஆட்டநாயகன் விருதினையும், மலிங்கா தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூ சவுத்வேல்ஸ் வீரர் டேவிட் வார்னருக்கு தங்கபேட் விருது கிடைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.