எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 9 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை- சேப்பாக்கம் ஸ்டேடியம் உட்பட இந்தியாவின் முக்கிய 8 ஸ்டேடியங்களில் சிலவற்றில் பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:-
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட 8 நகரங்களில் இந்த போட்டி நடந்து வருகிறது. இந்த 8 மைதானங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்து எச்சரித்தன. லஷ்கர்இதொய்பா தீவிரவாதி ஜெய்புதீன் அன் சாரியும், அவனது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு இந்தியா வந்து நோட்டமிட்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இஸ்ரேல் உளவுத் துறையும் உலக கோப்பை கிரிக்கெட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளில் சிலர் ஊடுருவி உள்ளனர் என்று எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியம், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 ஸ்டேடியங்களைத் தகர்க்க குறி வைத்திருப்பது தெரிய வந்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 8 ஸ்டேடியங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்படியும், உஷாராக இருக்கும்படியும் தமிழக அரசை மத்திய உள் துறை தற்போது அறிவுறுத்தி உள்ளது. இதன் முலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு அதிக தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற 16 மற்றும் 20-ந்தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த ஆட்டமும் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் மிரட்டலைத் தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக இங்கு நடக்கும் போட்டிகளில் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாதி அன்சாரி, இந்தியாவில் உள்ள முஜாகி தீன்களை ஸ்டேடியத்துக்குள் அனுப்பி, ரசாயண கலவைகளை சேர்த்து நாச வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் கைப்பை, குளிர்பானங்கள் எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நாட்களில் 36 மணி நேரத்துக்கு முன்பு இருந்தே ஸ்டேடியமும் அதன் நான்கு புற சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். பார்வையாளர்களை சோதித்து உள்ளே அனுப்பும் பணியில் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 16 நுழைவாயில்களிலும் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேடியத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சோதிக்கப்படும். போட்டி தொடங்கும் முன்பு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் 4 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கார்களில் வருபவர்கள் அந்த கார் எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ள பாஸ் ஒட்டி இருந்தால்தான் பார்க் கிங் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மைதானம் முழுவதையும் தெளிவாக கண்காணிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒரு காமிரா அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரும் அமர்ந்து பார்வையாளர்களை கண்காணிப்பார். இவை தவிர அவசர தேவைக்காக மைதானத்தில் 100 அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். சந்தேகப்படும் நபர்களிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறினார். சேப்பாக்கம் அருகில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை துணைக் கமிஷனர் சாரங்கன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் மயில்வாகனன், உதவிக் கமிஷனர் தமிழ்ச் செல்வன், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.