முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குபதிவு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

பஹ்ராச், ஜன.- 7- உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கி  7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் மதீரா என்ற தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுபவர் அலி அக்பர். இவர் தனது சொந்த கிராமமான  கல்க்ரி என்ற  இடத்தில் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். தனது மகனுக்காக நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கான பேர்  கலந்து கொண்டு தடபுடல் விருந்து சாப்பிட்டனர்.
இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்று கூறி இவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை கோட்டாட்சியர்  இந்திர பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நான்பாரா போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு  இந்த ஆண்டு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்