முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் அவமானப் படுத்தினாலும் ஆதரிப்போம்: முலாயம்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஜன. - 8 - காங்கிரஸ் எங்களை அவமானப்படுத்தினாலும் மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் எங்களுக்கு உரிய மரியாதையை தரவில்லை. ஆனால் வகுப்புவாத சக்திகள் முக்கியத்துவம் பெறக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். உ.பி. சட்டமன்ற தேர்தலில் மற்றவர்களது ஆதரவு இல்லாமலேயே சமாஜ்வாடி வெற்றி பெறும். பேரவை தேர்தலில் கட்சி தோல்வியுற்றால் யார் பொறுப்பேற்பது என்று கேள்வி கேட்கிறார்கள். நானோ, எனது மகன் அகிலேஷ் யாதவோ தனியாக போட்டியிடவில்லை. அகிலேஷ் யாதவின் அரசியலுக்கு வந்ததை ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசத்தோடு ஒப்பிடக் கூடாது. அவரது விருப்பத்துக்கு நான் தடை போடவில்லை. மக்களவைக்கு அவர் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ராம்மனோகர் லோகியா வென்ற தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றிருக்கிறார் என்பதே ஒரு பெருமையான விஷயம்  என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்