எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.22 - நாளை தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கமும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி திரைப்படத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களையும், பொது விதிகளையும் முடிவு செய்வது வழக்கம். இதற்கிடையில் எங்களது சங்கத்தின் தேர்தல் கடந்த 09.10.11 அன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எங்களது புதிய நிர்வாகம் பதவியேற்ற பிண்பு நடத்தப்பட்ட அடுத்த 3-ஆண்டுகளுக்கான புதிய ஊதிய விகிதங்கள் குறித்து பேச்சு வார்த்தை முடிவடையாத நிலையில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் தாங்களாகவே முறையற்ற ஒரு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்து கொண்டதோடு இனி இந்த புதிய சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு தான் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்று தன்னிச்சையாக 20.01.2012 அன்று அறிவித்துள்ளனர்.
இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி ஒப்பந்தம் செய்யப்படும் அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் ஜனநாயகப் போக்கிற்கு சவால் விடுவது போல திரைப்பத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தன்னிச்சையான செயல்பாடு அமைந்துள்ளது.
ஆகவே தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்களின் இந்த எதேச்சிகரமான முடிவு குறித்து தயாரிப்பாளர்களோடு கலந்து பேசவும், தொழிலாளர்களுக்கு எந்த விகிதத்தில் சம்பள உயர்வைக் கொடுத்து படப்பிடிப்பைத் தொடருவது என்று முடிவெடுக்கவும் தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் 23.01.2012 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.
இது எல்லா திரைப்படத் தயாரிப்பாளர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் என்பதால் இக்கூட்டத்தில் எல்லாத் திரைப்படத் தயாரிப்பாளர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக 23.01.2012 (திங்கட்கிழமை) அன்று முழு நாளும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அன்று எந்தத் தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது. ஆகவே தயாரிப்பாளர்களின் ஒற்றுமை காக்க அனைத்து தயாரிப்பாளர்களும் இந்த மிக முக்கிய கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
08 May 2024 -
கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
08 May 2024வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 இ.வி.எம். எரிந்து முற்றிலும் நாசம்
08 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதா? - இந்தியர்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் : பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்
08 May 2024புதுடெல்லி : நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களை அவமதிப்பதா? என்று பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
வரும் 17-ம் மீண்டும் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
08 May 2024வாஷிங்டன், விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 17-ம் மீண்டும் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.