முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களின் 82 படகுகளை மீட்க கோரிக்கை

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழக மீனவர்களின் 82 படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் Nfhhpயுள்ளார்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் தூக்குத் தண்டனை பெற்ற 5 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியால் நல்லது நடந்துள்ளது.
• அனைவருக்கும் மகிழ்ச்சி காணும் சூழலில், இன்னும் 24 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். நம் மீனவர்களின் 82 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி வைத்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் தொழில் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடல் அலைகள் மற்றும் புயல் மழை காரணமாக இலங்கை அரசு கைப்பற்றி வைத்துள்ள நமது மீனவர்களின் படகுகள் சேதமடைந்து வருகிறது. எனவே படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். Ïவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து