முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட நபர் 9ஆண்டு கோமா நிலைக்கு பின்னர் உயிரிழந்தார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: கடந்த 2006ம்ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெடிப்பின் போது ரயிலில் வந்த பராக் சாவந்த் என்ற நபர் கோமா நிலைக்கு சென்றார்.அவர் கடந்த 9ஆண்டுகளாக கோமாவில்இருந்தார்.அவர் மும்பை இந்துஜா மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்.அவர் நேற்றுகாலை மரணம் அடைந்தார்.

சாவந்த் தானே மாவட்டத்தில் உள்ள பியாந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.அவர் விரார் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த போது குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு ஏற்பட்ட போது அவரதுமனைவி பிரீதி சாவந்த் கர்ப்பமாக இருந்தார்.அவருக்குமேற்கு ரயில்வே வேலை அளித்தது.

கோமாவில் இருந்த சாவந்த் கோமாவில் இருந்து மெல்ல மீட்சி பெறுவது குறித்து அறிகுறிகள் காணப்பட்டன.ஆனால் அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்காணப்படவில்லை. இந்த நிலையில் நேற்றுஅவர் மரணம் அடைந்ரார். சாவந்த்தின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து