எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சுந்தர்ராஜன் நேற்று தொடங்கி வைத்தனர்.
மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானம் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் நேற்று துவங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப்போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு ,விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர், மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று தொடங்கிவைத்து விழாப்பேருரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: இந்திய திருநாட்டிற்கே வழிகாட்டியாக திகழும் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி பருவத்திலேயே உடல் வளத்துடன், பலத்துடனும் இருந்தால் தான் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு பள்ளி அளவில், கல்லூரி அளவில், பல்கலைகழகங்கள் அளவில் பயிலும் மாணவ, மாணவியர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு திட்டமாக மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியினை நடத்திட தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இந்த நல்ல வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு கல்வியோடு இணைந்து விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் பேசியதாவது, தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தேசிய அளவில், உலக அளவில் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் பங்கேற்க வேணடும் என்பதற்காக கல்வித்துறைக்கு இணையாக நிதி ஒதுக்கீடுகளையும், பல்வேறு பயிற்சிகளையும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இன்று நடைபெறும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், காருண்யா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதர் தெரசா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் போன்ற 15 பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க உள்ளார்கள். மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நிகர்நிலை பல்கலைக்கழக போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு அணிகளும், மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகத்தின் அணிகளும் கலந்து கொள்வார்கள். நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் விளையாட்டுப்போட்டிகள் மற்றும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் நடத்திட தொடர் மான்யமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டிகளில் முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.7500ம், மூன்றாம் இடம் பெறும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், ரொக்கப்பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 582 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.43,65,000 - வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை எம்.ராஜா, தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மாமன்ற உறுப்பினர்கள் புதூர் அபுதாகீர், ராமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துணைப்பொது மேலாளர் ஷாஜு, மண்டல முதுநிலை மேலாளர்கள் தமிழ்செல்வன் (மதுரை), சாந்தன் (சென்னை), மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மதுரை கபாடி கழக சேர்மன் வல்லரசு, 8 வது வட்ட அம்மா பேரவை செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.