முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தின் மீது விதித்துள்ள தடையை இந்தியா விலக்க வேண்டும் : நேபாளத்தின் பிரதமர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

காத்மாண்டு(நேபாளம்) - நேபாளத்தின் மீது விதித்துள்ள தடை விலக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் கட்கா பிரசாத் ஒளி இந்தியாவிடம் கேட்டுகொண்டுள்ளார். அறிவிக்கப்படாத ஒரு தடையை நேபாளத்தின் மீது இந்தியா விதித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். நேபாளத்தில் அண்மையில் நடந்த பூகம்பத்தை அடுத்து எழுந்துள்ள நெருக்கடியை இத்தடை மேலும் மோசமாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கள் வருவதில் எழுந்துள்ள சிரமத்துக்கு தாங்கள் காரணம் அல்ல என்று இந்தியா கூறுகிறது. ஆனால் நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய அரசாங்கம் நேபாளத்துக்கான பொருள் வரத்தை கட்டுப்படுத்துவதாக நேபாளம் கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்