முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ குரூப் சார்பில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகளுக்கு வெகு விமர்சையான வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், -ராஜபாளையத்தில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகளுக்கு சிறப்பான வரவேற்பு பூரண கும்ப மரியாதையுடன் ராம்கோ சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா வைஸ் சேர்மன் வெங்கட்ராமராஜா ஆகியோர் வரவேற்று ராமமந்திரம் வரை ஊர்வலமாக அழைத்து சென்றனார். 

ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் சாலையில் ராம்கோ குரூப் நிறுவனம் சார்பில் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோயில் புதியதாக கட்டுப்பட்டுள்ளது.  இதனை ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் முன்னிலையில் வரும் 9ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தி சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்திற்கு ஸமர்பிக்கும் விழாவும் நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சிக்கு பங்கு பெறுவதற்கு சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸன்னிதானம் மற்றும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸன்னிதானம் ஆகிய இருவரும் நேற்று மாலை ராஜபாளையம் வந்தனர்.  இவர்கள் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நகரில் இருந்து ராம்Nகுh குரூப் நிறுவனம் சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியி கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்குகிறார்கள்.  ராஜபாளையம் வந்த பீடாதிபதிகளை தென்காசி சாலையில் தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கி முன்பு ராம்கோ சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணியராஜா பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்று பல்வேறு மேளதாளங்களுடன் ராமமந்திரம் வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.  அதனை தொடர்ந்து ராமமந்திரத்தில் தூளிபாத பூஜை ஜ்வாகதபத்ரம் ஸமர்பிக்கப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்ட பீடாதீபதிகள் பக்தர்களுக்கு அனுக்ரஹபாஷனம் நடத்தினர். விழாவில் ராம்கோ குடும்பத்தினர், ஸ்ரீகண்டன்ராஜா, என்.கே. ராமசாமிராஜா,  மற்றும் தொழிலதிபர்கள் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்