எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் ஜென்னிகிளப் கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் முழு கணினி மயமாக்கல் முன்னேற்றம் குறித்து 8 மாவட்டங்களுக்கான (கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) ஆய்வுக் கூட்டம் கூட்டறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் பிரதீப்யாதவ் , உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) கே.கோபால் , கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் , மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் ஆகியோர் முன்னிலையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் , நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சிமார்ட் கார்டு
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவுத்திட்டமாக திகழ்ந்து வந்த சுமார்ட் கார்டு வழங்கும் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரரும் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் பெறுவது மட்டுமின்றி அதன் இருப்பு விவரம் குறித்து தெரிந்து கொள்வதுடன் குடோனில் இருந்து விற்பனை நிலையத்திற்கு வருகின்ற வரை அதன் நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தற்பொழுது அதன் செயல்பாடுகள் குறித்து கணினி மயமாக்குபப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொது விநியோகத்திட்ட கணினி மயமாக்கல் தொடர்பாக அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய பு2புஇ ஆஐளு மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வnpனள ஆகிய வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் வழங்கிட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசணை வழங்கப்பட்டது.
இ-சேவை
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு அட்டைகள் பெற்றபின் அதில் மாற்றங்கள் தேவைப்படின், கைப்பேசி செயலி பொது மக்களுக்கான வலைதளம் (வnpனள.பழஎ.in) மற்றும் உதவி ஆணையாளர்கள் ஃ வட்ட வழங்கல் அலுவலகங்களில் செய்து கொள்ளலாம். தேவைக்கேற்ப மாற்றம் செய்தபின் புதிய மின்னணு அட்டையை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக இதுவரை, 86 இலட்சத்து 18 ஆயிரம் புதிய மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னணு அட்டைகளை வழங்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1 கோடியே 90 இலட்சத்து 80 ஆயிரத்து 693 குடும்ப அட்டைகளில், 1 கோடியே 37 இலட்சத்து 34 ஆயிரத்து 615 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் முழுவதுமாகவும், 51 இலட்சத்து 59 ஆயிரத்து 482 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இலட்சத்து 96 ஆயிரத்து 596 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் பதிவு செய்யப்பட பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்பாக மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோயம்புத்தூர் மண்டலத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 9 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 3 இலட்சத்து 53 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களுக்கு சுமார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு சுமார்ட் கார்டு பணி நடைபெற்று வருகின்றது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
ரூ.330 கோடி
புரட்சித்தலைவி அம்மா எந்த மாநிலத்திலுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தாத நிலையில் முதன்முதலாக தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.330 கோடி முதற்கட்டமாக நிதி ஒதுக்கி சுமார்ட் கார்டு வழங்குவதற்கான பணியினை துவக்கி வைத்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் உள்தாள் ஒட்டும் பணியைத்தான் செய்தார்கள் அதை மாற்றி பொது மக்களின் பயனுள்ள திட்டமாக திகழ வேண்டும் என்பதே அம்மா அவர்களின் இலட்சியமாக திகழ்ந்து வந்தது. அந்த இலட்சியத்தை இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் சுமார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக இத்துறையின் மூலம் செயல்பாடுகள் குறித்து கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. மேலும் அமைச்சர் இத்துறையில் சிறப்பு கவனம் எடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக மாவட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பகுதி நேரம் மற்றும் முழு நேர நியாயவிலைக்கடை அமைக்க கோரிக்கை வைத்தால் அதை உடனுக்குடன் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் பொதுவிநியோகத்திட்டத்தின் செயல்பாடுகள் சிறந்து விளங்குகின்றன என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் வெங்கடப்பிரியா, கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த வழங்கல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?