எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கொச்சி முதல் திருப்புணித்துறா வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை நேற்று கொச்சி ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக ...
கேரளாவில் கொச்சியில் இருந்து திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் முதல் கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரையிலான 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் திட்டப்பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது. இதற்கான தொடக்க விழா கொச்சி ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது.
பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து நேற்று காலை கொச்சி வந்தார். பகல் 11 மணிக்கு தொடக்க விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர் வெங்கைய்யாநாயுடு, கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் மெட்ரோ ரெயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரெயிலில் பயணம்
மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரெயிலில் பயணம் செய்தார். அவருடன், கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன், மத்திய அமைச்சர் வெங்கைய்யாநாயுடு, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன் ஆகியோரும் சென்றனர். பின்னர் அதே ரெயிலில் அவர்கள் ஆலுவா திரும்பினார்.
பிரதமர் பாராட்டு
ரெயிலில் பயணம் செய்த போது, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மெட்ரோ ரெயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டினார். மகத்தான சாதனையை செய்து முடித்து விட்டீர்கள் என்று கூறி வாழ்த்தினார். மெட்ரோ ரெயிலின் தொடக்க விழா நேற்று நடந்தாலும் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியில் திருநங்கைகள் ...
மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் முதல் முறையாக திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்க, துப்புரவு பணி செய்ய என முதல் கட்டமாக 23 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் ஓடும்போது 60 திருநங்கைகள் பணியில் இருப்பார்கள் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாண்டிக்கு அழைப்பு இல்லை
கொச்சி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடக்க விழா உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இப்பணியினை முடிக்க உம்மன்சாண்டி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இப்போது முதல் கட்ட பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நடக்கும் நிலையில், விழாவில் பங்கேற்க உம்மன்சாண்டிக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
வருத்தம் இல்லை
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைக்காததில் எனக்கு வருத்தம் இல்லை. கேரளா மக்கள் நினைத்தால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியும் என்பதற்கு கொச்சி மெட்ரோ ரெயில் திட்டமே உதாரணமாகும். இன்று (நேற்று)நான் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். எனவே இன்னொரு நாளில் நான், மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக பயணம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேக் இன் இந்தியா திட்டம்
மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
“ மேக் இன் இந்தியா திட்டத்தை ரயில் பெட்டிகள் பிரதிபலிக்கிறது. சென்னை அருகே உள்ள தொழிற்சாலைகளில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய மூலப்பொருட்கள் 70 சதவீதத்தை கொண்டு ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சி நகரில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2021-ல் 23 லட்சமாக இங்கு மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர்புற உள்கட்டமைப்புகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைப்பதற்கு இது போன்ற விரைவான போக்குவரத்து அவசியம். கொச்சி பொருளாதார வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்களிக்கும். நகரத்தின் மொத்த பொது போக்குவரத்து அமைப்பை ஒரே சிஸ்டம் கீழ் கொச்சி மெட்ரோ ஒருங்கிணைக்கும்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 min 3 sec ago |
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல