எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நதிகளை இணைக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் மறைந்த முதல்வர் அம்மா ( ஜெயலலிதா) என்று சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
சென்னையில் ‘நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
நம் நாட்டின் நதிகள் மீட்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் ‘நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்’ என்ற இயக்கம் தேசிய இயக்கமாக சத்குரு தலைமையில்கோயம்புத்தூர் முதல் புது டெல்லி வரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் இச்சீர்மிகு விழாவில் உங்களுடன் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமான மரங்களை நடுவதன் மூலம் நதிகளைப் பாதுகாப்பது, போன்ற பல்வேறு இயற்கையைப் பேணிக் காக்கும் நிகழ்வுகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். இதனால், அவர் நதிகளை இணைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வந்தார். அதேபோன்று, மாநில நதிகளை தேசிய மயமாக்கி, நதிகளின் நீர் ஆதாரத்தை உகந்த வகையில் உபயோகப்படுத்தப் பட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கோரிவந்தார். நதிகள் இணைப்பிற்காக நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்புதிட்டம் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 34 ஆறுகள், 89 அணைகள் மற்றும் 14,098 பெரியஏரிகள் பொதுப்பணித் துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளத்தினை பாதுகாக்கும்அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். நீர்வளஆதாரங்களை சீரிய முறையில் மேம்படுத்துவதற்கான முக்கியமுயற்சியாக ‘குடிமராமத்து’ முறைக்குப் புத்துயிரூட்டி பங்கேற்பு அணுகுமுறையடன் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. 2016-2017 ஆம் ஆண்டில்1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கப்பட்டுள்ளன.
2017-2018 ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2,065பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும், ஒரு சிறப்பு முயற்சியாக ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளைமண்ணை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம்செய்பவர்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தற்பொழுது செயலாக்கத்தில் உள்ளன. மேலும் மாநிலத்திலுள்ள அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் படிவுகளை அகற்றி, அணைகளின் திட்டமிடப்பட்ட கொள்ளளவினை மீட்டெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நிலத்தடி நீரை செறிவூட்டவும் ஆறுகளிலிருந்து ஏரிகளுக்குத் தண்ணீரை கொண்டு செல்லவும் புதிய தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுக்கள் கட்டவும் ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் புதியதிட்டங்கள் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளன.
காவேரி ஆற்றின் கழிமுகப் பகுதிகளில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினை தணிப்பதற்கும்,அப்பகுதிகளில் உள்ள வடிகால்களை மேம்படுத்துவதற்கும், 1,560 கோடிரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தற்பொழுது செயலாக்கத்தில் உள்ளது.மேலும், காவேரி வடிநிலத்தில் பாசன அமைப்புகளை 14,500 கோடிரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தின் கீழ்,கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு 2,298 கோடியே 75 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நதிகள் இணைப்பிற்காக இதுவரை நடைபெற்ற 12 கூட்டங்களில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசுவலியுறுத்தி வருகிறது. மேலும், இதனைப் பூர்த்தி செய்யும் வகையில், கங்கை சீரமைப்பு பணியினை மேற்கொள்வதை போன்று தேசிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நதிகள் இணைப்பு திட்டங்கள்செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்,மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு -பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பிற்கான விரிவானதிட்ட அறிக்கை மேலும் காலதாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும்என்றும், நதிகள் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒருசட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு துரிதமாகசெயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.
பிரதமரை 27.02.2017 அன்று நான்சந்தித்து பன்மாநில நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். மேலும், 24.05.2017 அன்று நான் எழுதியுள்ள கடிதத்தில் பம்பா -அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டத்திற்கான இசைவினைவழங்க கேரள அரசுக்கு உரிய அறிவுரை வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் காவேரி ஆற்றிலிருந்து தண்ணீரை வைகை மற்றும்குண்டாற்றிற்கு கொண்டு செல்ல உரிய நதிகள் இணைப்பை ஏற்படுத்தும் பொருட்டு காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் மாயனூர் என்ற இடத்தில் புதிய கதவணை 254 கோடியே 45 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் மாநில அரசின் நிதிஆதாரங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாகஇக்கதவணையின் மேற்பகுதியிலிருந்து புதிய கால்வாய் அமைத்து காவேரி ஆற்றின் வெள்ள நீரை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு,மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் மிகை நீரை காளிங்கராயன்அணைக்கட்டிலிருந்து நீரேற்று முறையில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளம்குட்டைகளை நிரப்பும் திட்டமாக அத்திகடவு – அவிநாசி திட்டம் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள30 பொதுப்பணித்துறை ஏரிகள், 41 ஒன்றிய ஏரிகள் மற்றும் 630 குளம்குட்டைகள் பயன்பெறும் .நீர்வளங்களுக்கு ஆதாரமாக உள்ள காடுகளையும், மரங்களையும்பேணிப் பாதுகாப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பசுமைப் போர்வையினைமேம்படுத்தவும், மரங்களின் பயன்பாட்டினை நீட்டிக்கவும் வனங்களுக்குஉள்ளேயும், வெளியேயும், 7.55 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வனவளங்கள் பாதுகாக்கப்பட்டு, பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி 2012-13 முதல் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும்மரம் நடவுத் திட்டத்தின் கீழ் இதுவரை 3.99 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு மரங்களின் அடர்த்தியை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24-ஆம்தேதியன்று தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைவளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு 69 இலட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்ததை மகிழ்ச்சியுடன் இங்குநினைவு கூர விரும்புகிறேன்.
மேலும், காப்பு வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களடர்ந்தபரப்பினை அதிகரித்தல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மண் அரிப்பைதடுத்தல் ஆகியவற்றினை நோக்கங்களாகக் கொண்டு ஆற்றுப்படுகைகளில் 14,335 எக்டேர் பரப்பளவில் தேக்குமரத் தோட்டங்கள்எழுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் இயற்கையாக சந்தன மரங்கள் வளரும்மாவட்டங்களான வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் சந்தனமரங்களை மறுஉற்பத்தி செய்யும் திட்டம்ரூ.100.00 கோடி செலவில், 2016-17-ஆம் ஆண்டு முதல்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 12.12.2016 அன்று வார்தா புயல் காரணமாக சென்னை மாநகரம்மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியமாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடுசாய்ந்தன. இழந்த பசுமைப் போர்வையினை மீட்டெடுக்கும் பொருட்டுசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ. 13.42 கோடி செலவில் மரக்கன்றுகள்நடப்பட்டு வருகின்றது.
வனப்பகுதிகளில் உயிர்ப்பன்மையினைஅதிகரிக்கவும், வைகை மற்றும் நொய்யல் நீர்வடிப்பகுதிகளில் தொடர்நீர் வரத்தினை அதிகரிக்கவும் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் வைகைமற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் ஊட்டுதல் எனும் புதிய திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் தமிழகஅரசின் சீரிய கவனத்தில் உள்ளது என்பதைத் தெரிவித்து மேலும்,மரியாதைக்குரிய ஈஷா யோகா மையத்தை சார்ந்த சத்குருவின் நதிகளை மீட்போம் என்ற இயக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுமிகவும் பாராட்டுக்குரியதாகும். நீர் மிக மிக இன்றியமையாதது.மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்திற்கும் நீரின்தேவை மிக முக்கியமானதாகும். அரசு புறம்போக்கு நிலங்களில் எங்கெங்கே இந்த ஈஷா யோகா மையத்தை சார்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட முன்வந்தால், அதற்கான அனைத்து உதவிகளையும்இந்த அரசு செய்யும். .சத்குரு எந்த நோக்கத்திற்காகஇந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த இயக்கம் வெற்றி பெற நாம்அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.