எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலி: சிலி நாட்டில், 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, போப் ஆண்டவர் ஆசியுடன் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. போப் ஆண்டவர் பயணித்த விமானத்தில் திருமணம் நடப்பது இதுதான் முதல்முறையாகும்.
சுற்றுப்பயணம்
தென் அமெரிக்க கண்டத்தில் சிலி நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் சான்டியாகோ நகரில் இருந்து வடபகுதியில் இருக்கும் ஐகியூகியூ நகருக்கு லதாம் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் 321 என்ற விமானத்தில் நேற்று பயணித்தார்.
இந்த விமானத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், விமானத்தின் தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயணம் செய்தனர். விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி போப் ஆண்டவர் பிரான்சிஸிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
திருமணம்
மணமகன் கார்லோஸ் சியுபார்டி(வயது 41), மணமகள் வுலா போடெஸ்ட்(வயது 39) ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற போப் ஆண்டவர் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.
இந்த திருமணம் குறித்து மணமகன் கார்லோஸ் சியுபார்டி நிருபர்களிடம் கூறுகையில், '' நாங்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதியே திருமணம் செய்துவிட்டோம். அப்போது, சிலி நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால், தேவாலயம் சிதலமடைந்தது. ஆதலால், அங்கு திருமணம் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவில்லை. ஆதலால், இப்போது உங்கள் முன் திருமணம் செய்ய விரும்புகிறோம் என போப் ஆண்டவரிடம் தெரிவித்தோம்.
சம்மதம்
அதற்கு அவர், 'நான் செய்து வைக்கிறேன்' என்றார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று போப் எங்களிடம் கேட்டார். 'ஆம்' எனத் தெரிவித்தோம். எங்கள் இருவருக்கும் மிகச் சுருக்கமாக திருமண சடங்குகளை போப் ஆண்டவர் பிரான்சிஸ் செய்து வைத்தார். லதாம் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைவர் இக்னேஷியோ கியூடோ எங்கள் திருமணத்தின் சாட்சியாக இருந்தார்.
அதன்பின் எங்களுக்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையொப்பம் இட்ட, கையால் எழுதப்பட்ட திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில், விமானத்தில் நடந்த இந்த திருமணம் விலை மதிப்பில்லாதது.
எங்களின் திருமணம் உண்மையில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் போப் ஆண்டவர் பிரான்சிஸ் விமானத்தில் யாருக்கும் திருமணம் செய்து வைத்தது இல்லை.
எங்களுக்கு முறைப்படி திருமணம் இப்போதுதான் நடந்துள்ளது என்கிற போதிலும், தற்போது 6 வயதிலும், 3 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். விரைவில் 'மினி ஹனி மூன்' செல்ல திட்டமிட்டுள்ளோம்'' கார்லோஸ் சியுபார்டி தெரிவித்தார்.
இந்த திருமணம் குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் கிரேக் புருக் கூறுகையில், ''இங்கு நடந்த திருமணம் செல்லுபடியாகும். அனைத்தும் அதிகாரப்பூர்வமானது. திருமணச் சான்றிதழும், புகைப்படமும் அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.
போப் ஆண்டவர் சொன்ன அறிவுரை
புதுமணத் தம்பதியினருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறிய அறிவுரையும் கூறியுள்ளார். அதில் ''திருமணத்தன்று கையில் அணிவிக்கப்படும் மோதிரம் மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அது உங்களுக்கு எரிச்சலைஉண்டாக்கும். அதேசமயம், விரலைக் காட்டிலும் மோதிரம் சிறிது பெரிதாக இருந்தால், எளிதாக விரலில் இருந்து கழன்றுவிடும். ஆதலால், கவனமாக இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.