எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை பந்துவீச்சை சிதறடித்து வெற்றி பெற வைத்தார் சீனியர் வீரரான, பிராவோ.
பந்து வீச்சு தேர்வு
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. இரண்டாண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே களத்திற்கு திரும்பியுள்ளதால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு, சென்னை வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹரும், ஷேன் வாட்சனும் நெருக்கடி கொடுத்தனர்.
மும்பை அதிரடி...
மும்பை தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ், ரன் எதுவும் எடுக்காமால் தீபக் சாஹரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் கேட்ச் ஆனார். பின் இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள்தான் எடுத்திருந்தது. பின்னர் அந்த அணி அதிரடி காட்டியது. சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்களும், இஷான் கிஷன் 29 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.
165 ரன்கள்...
இறுதிக்கட்டத்தில் பாண்ட்யா சகோதரர்கள், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர். குணால் பாண்டயா 22 பந்தில், 41 ரன்களும் ஹர்திக் 20 பந்துகளில் 22 ரன்களும் எடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய ஹர்திக் பாண்ட்யா, சென்னையின் பிராவோவுடன் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்றனர். சென்னை தரப்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆரம்பமே அதிர்ச்சி...
பின்னர் களமிறங்கிய சென்னைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் முதலில் தடுமாறி, அதிரடியில் இறங்கிய போது ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். அவர் 16 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு 22 ரன்களில் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா (4), கேப்டன் டோனி (5 ரன்), ஜடேஜா (12 ரன்) என யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. மெதுவாக ஆடிக்கொண்டிருந்த கேதர் ஜாதவ், காயம் காரணமாக வெளியேற, சென்னை அணி தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியானது.
பிராவோ அபாரம்...
இந்நிலையில் களமிறங்கிய பிராவோ, ’ஒத்தையாக’ போராடினார். 18 -ஓவரை மேக்லஹென் வீச, அந்த ஓவரில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தார். அதுவரை டிரெஸ்சிங் ரூமுக்குள் உட்கார்ந்து சோகமாக பார்த்துக்கொண்டிருந்த சென்னை அணியினருக்கு பிராவோவின் அதிரடி நம்பிக்கை அளித்தது. பிறகுதான் சிரிக்கவே ஆரம்பித்தார் டோனி.
68 ரன்கள் குவித்தார்
அடுத்து 19-வது ஒவரை பும்ரா வீசினார். யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான இவரது பந்தில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு பதற்றத்தைத் தணித்த பிராவோ, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட் ஆனார். அவர் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரியும் 7 சிக்சர் அடங்கும்.
பவுண்டரி அடித்து...
பின்னர் காயம் காரணமாக பாதியில் வெளியே சென்ற கேதர் ஜாதவ் வந்தார். பங்களாதேஷின் முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். முதல் மூன்று பந்துகளை விட்டுவிட்ட கேதர், டென்ஷனை அதிகரித்தார். ஆனால் அடுத்த பந்தில் சிக்சர் பறக்கவிட்டதும் திரில் அதிகரித்தது. வெற்றிக்கு 2 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்டது. பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார் காயத்துடன் ஆடிய ஜாதவ்.
ஹர்திக் பாண்ட்யா...
சென்னை அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் மார்கண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது பிராவோவுக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 min 3 sec ago |
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல