முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.வி.சேகர், எச். ராஜா சைபர் சைக்கோக்கள்! புகார் தெரிவித்தால் நடவடிக்கை உறுதி:அமைச்சர் ஜெயகுமார்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எச். ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் சைபர் சைக்கோக்கள். அவர்களால் தமிழகத்துக்கு ஆபத்து. இருவர் மீதும் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் செய்தியாளர் லட்சுமியின் கன்னத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தட்டினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பெண் பத்திரிகையாளரிடம் கவர்னர் மன்னிப்பு கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்ற போதிலும் அந்த நிருபர் லட்சுமி அதற்காக அவர் கூறிய காரணத்தை ஏற்க மறுத்து விட்டார். இந்நிலையில் பா.ஜ.கவைச் சேர்ந்த எச். ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் மிக கீழ்த்தரமான வகையில் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் கிளம்பியதை தொடர்ந்து அவற்றை இருவரும் நீக்கி விட்டனர்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், அவதூறு கருத்து தெரிவித்தவர்கள் மீது பத்திரிகையாளர்கள் புகார் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறாக பேசும் எச். ராஜா மீது அரசு வழக்கு தொடரும். தமிழக அரசு யாருக்கும் வக்காலத்து வாங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.வி. சேகர், எச். ராஜா இழிவாக பேசுவதை ஏற்க முடியாது. இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து; பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து