எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.
285 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (80 ரன்), பேர்ஸ்டோ (70 ரன்) அரைசதம் அடித்தனர்.
அஸ்வின்...
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே முகமது ஷமியின் பந்து வீச்சில் சாம் குர்ரன் (24 ரன்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
முரளி விஜய்...
பின்னர் இந்திய அணியின் முதல் இன்னிங்சை முரளி விஜயும், ஷிகர் தவானும் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்து குடைச்சல் கொடுத்தனர். அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் (13.4 ஓவர்) பிரிந்தது.
இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 20 வயது சாம் குர்ரனின் பந்து வீச்சில் முரளிவிஜய் (20 ரன், 45 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். அதே ஓவரில் அவரும் காலியானார். ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை அடித்த போது, அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்னுடன் நடையை கட்டினார்.
கார்த்திக் ஏமாற்றம்
அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில் தட்டுத்தடுமாறிய ஷிகர் தவானுக்கும் (26 ரன், 46 பந்து, 3 பவுண்டரி) குர்ரன் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் ஷிகர் தவான் ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஹானே களம் இறங்கினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 76 ரன்களுடன் பரிதவித்தது.
அணியின் ஸ்கோர் 27.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய போது ரஹானே (15 ரன், 34 பந்து, ஒரு பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (0) வந்த வேகத்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பாண்ட்யா 22 ரன்
இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். ஹர்திக் பாண்ட்யா ரன் கணக்கை தொடங்கும் முன்பே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். அப்பீல் செய்ததில் அவர் அவுட்டில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை விராட்கோலி அடித்து ஆட முயல அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானை நோக்கி சென்றது. அவர் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். அப்போது விராட்கோலி 21 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த முறை ஸ்லிப்பில் நின்ற அலஸ்டயர் குக் நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.
ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2 முறை ‘அவுட்’ ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசத்தால் தப்பிய ஹர்திக் பாண்ட்யா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன் எடுத்த நிலையில் குர்ரன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.
விராட்கோலி சதம்
இதனை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 100 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து அஸ்வின் (10 ரன், 15 பந்து, 2 பவுண்டரி), முகமது ஷமி (2 ரன்) ஆகியோர் விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா (5 ரன்) அடில் ரஷித் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.
ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய விராட்கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். முதலில் சற்று தடுமாறியதுடன், கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய விராட்கோலியின் ஆட்டம் போகப்போக சூடுபிடித்தது. நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி, 65-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி சதத்தை எட்டினார். அவர் 172 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் உரக்க சத்தமிட்ட விராட்கோலி தனது கழுத்தில் செயினில் அணிந்து இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.
இந்திய அணி 274 ரன்
சதம் அடித்த பிறகும் விராட்கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அடில் ரஷித் பந்து வீச்சில் ஷாட் பிட்ச் ஆகி வைடாக சென்ற பந்தை விராட்கோலி அடித்து ஆடினார். அது ஸ்டூவர்ட் பிராட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோலி 225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 76 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் (16 பந்துகளில்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
2-வது இன்னிங்ஸ்...
13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?