முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி,விமானத்தில் பா.ஜ.க.விற்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானப் பயணத்தின்போது பா.ஜ.க.வுக்கு எதிராக அக்கட்சியின் தமிழ் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை முன்பு சோபியா பெலிக்ஸ் என்ற பெண் முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார்.

சோபியாவுக்கு ஜாமீன்:கைது செய்யப்பட்ட சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மீது சோபியா குடும்பத்தினர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோபியா தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சோபியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து