எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களிடையே தற்பொழுது பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, பார்லி போன்றவை பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டுக் கோழி இறைச்சியும், நாட்டுக் கோழி முட்டையும் பிரபலமடைந்து வருகின்றன. நாட்டுக்கோழி வளர்ப்பு பாரம்பரியமாக குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் வளர்க்கப்படுகிறது. கிராம மகளிரே பெரும்பாலும் இதை பராமரிக்கின்றனர்.
கடந்த சில வருடங்களில் நாட்டுக் கோழியின் இறைச்சியை அதிக அளவில் மக்கள் விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே தமிழகத்தில் வியாபார ரீதியில் தீவிர முறையில் நாட்டுக் கோழிகள் இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கப்பட்டு ஒருநாள் குஞ்சுகளாக லட்சக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உள்ளூர், வெளியூர் சந்தையிலும் நாட்டுக் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தோராயமாக தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்கோழி வளர்ப்பதற்கான அனுகூலங்கள்
இறைச்சிக் கோழி மற்றும் முட்டை கோழி பண்ணை தொடங்க அதிக அளவு முதலீடு தேவை. ஆனால் நாட்டுக் கோழி வளர்க்க குறைந்த முதலீடு போதும். எளிமையான பராமரிப்பே போதுமானது. அதிக நார்ச் சத்துக்கள் உணவை உட்கொள்ளும் இயல்பு கொண்டவை. குறைந்த புரதம் மற்றும் எரிசக்தி கொண்ட தானியங்களை உட்கொண்டு முட்டையிடும் திறன் கொண்டவை. கலப்புத் தீவனம் மட்டும் அல்லாமல் காய்கறி கழிவுகள் மற்றும் புல், பூண்டு போன்றவை உண்பதால் தீவனச்செலவு குறையும். அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை. குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நாட்டுக்கோழி இறைச்சி வயோதிகர்களுக்கு பெற்றது. கிராம மக்களின் புரதத் தேவையை நாட்டுக்கோழி முட்டைகளும் பூர்த்தி செய்கின்றன.
கோழி இனங்கள்
நாட்டுக்கோழிகளில் நான்கு முக்கிய தூய இனங்கள் உள்ளன. அவை அசீல், கடக்நாத், சிட்டகாங் மற்றும் பஸ்ரா முதலியனவாகும். தற்பொழுது இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கோழிகளை தீவிர முறை, புறக் கடை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள நாட்டுக் கோழிகள் என பராமரிப்பு வசதிகளுக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம்.
தீவிர முறை வளர்ப்பில் அசீல் மற்றும் அசீல் கலப்பினங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறக்கடை வளர்ப்பிற்காக நந்தனம் கோழி - 1 மற்றும் 2 மற்ற மாநிலங்களில் உருவாக்கப்பட்ட வனராஜா, கிரிராஜா, கிராமப்பிரியா முதலியவற்றை உதாரணமாகக் கூறலாம். மொட்டை கழுத்து கோழி (கிராப்புக்கோழி), நிக்கோபாரி, பஞ்சாப் பழுப்பு, மிரி, டவோதி கிர் முதலியவற்றைக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நாட்டுக்கோழிகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் நாட்டுக்கோழிகளின் பாரம்பரிய குணாதிசயங்களைக் கொண்ட கோழி இரகங்கள் பல வருட ஆராய்ச்சிக்கு பின் உருவாக்கப்பட்டன. இதில் இறைச்சிக்காக இரண்டு மாத வயதில் சுமார் 1500 கிராம் உடல் எடை அடையக்கூடிய ரகமும், கிராமப்புறக் புறக்கடை முறையில் மேய்ச்சலுடன் தீவனமளித்து வருடத்திற்கு சுமார் 150 முட்டைகள் இடும் இரகமும் பணியாளர்களிடமும் மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்
நாட்டுக்கோழிகளை இறைச்சி, முட்டை மற்றும் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கலாம். இறைச்சிக்காக, ஒருநாள் வயது முதல் இரண்டு வார நாட்டுக்கோழி குஞ்சுகளை பெற்று 12 வாரம் வரை வளர்த்து 1 முதல் 1.25 கிலோ எடை அடையும் பொழுது விற்பனை செய்யலாம். பொதுவாக நாட்டுக்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கும் போது அவை 90 நாள்களில் ஒரு கிலோ எடை அடையும். முட்டைக்காக வளர்க்கும் தரமான பெட்டைக் கோழிகளை வளர்க்கும் போது அவை 20 வாரத்திலிருந்து முட்டையிட ஆரம்பிக்கும். நாட்டுக் கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 100 முட்டைகள் வரை இடும். தனுவாஸ் அசீல் கோழி வருடத்திற்கு 160 முட்டைகள் வரை இடும்.
இனப்பெருக்க நாட்டுக்கோழிகளுக்காக, 10 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் தாய் கோழிகளை வளர் பருவத்தில் (12-20 வாரத்தில்) வாங்கி அவற்றுக்கு தரமான இனப்பெருக்க கலப்புத் தீவனம் வழங்க வேண்டும். இனவிருத்திப் பெட்டைக் கோழிகள் ரூ.300-க்கும், சேவல்கள் ரூ.500 -க்கும் விற்கப்படுகின்றன. 24 வாரத்திற்கு பிறகு தாய்க்கோழிகள் கரு முட்டைகளை இடும். பிறகு கரு முட்டைகளை அடை வைத்து பெறப்படும் குஞ்சுகளை விற்பனை செய்யலாம். இனப்பெருக்க நாட்டுக்கோழிகளை பண்ணையில் வளர்க்கத் தொடங்கிய உடன் முறையாக கோழிகளுக்கான தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சி குறைவாகவே கிடைக்கின்றன இருப்பினும் நாட்டுக்கோழி மற்றும் இறைச்சியின் மேல் உள்ள நாட்டம் நுகர்வோரிடத்தில் சிறிதும் குறையவில்லை. வீரியமுள்ள இனவிருத்திக் கோழிகளை தேர்வு செய்து தரமான முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பான் அல்லது தாய்க்கோழி மூலம் குஞ்சுகளை பெற்று முறையான சந்தைப்படுத்துதல் மூலம் பண்ணையாளர்கள் அதிக லாபத்தை அடைவதற்கு திட்டமிட முடியும்.
தீவனம் அளிக்கும் முறைகள்
பெரும்பாலும் புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு பிரத்தியேக அடர் தீவனம் அளிப்பதில்லை ஆனால் தற்போது நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரத்தியேகத் தீவனம் அவசியமாகிறது. நாட்டுக்கோழிகளுக்கு குஞ்சுத்தீவனம், வளர்கோழித்தீவனம் மற்றும் முட்டைத் தீவனம் என மூன்று வகையான அடர் தீவனங்கள் முறையே 4 வாரங்களுக்கும், 5-20 வாரங்களுக்கும் மற்றும் 21 வார வயதிற்கு மேலும் என வழங்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு ஒன்று முதல் நான்கு வாரங்களுக்கு தினசரி 30 கிராம் வீதம் அடர் தீவனம் அளிக்க வேண்டும்.
5 8 வாரங்களுக்கு 50 கிராம் தீவனத்துடன் உடைந்த கோதுமை, நொய்யரிசி மற்றும் மேய்ச்சலில் வளர்க்க வேண்டும். 9- 16 வாரங்களுக்கு 50 கிராம் தீவனத்துடன் காய்கறி கழிவுகள் மற்றும் இதர தானியங்களை அளிக்க வேண்டும். முட்டைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு 80 கிராம் அடர்தீவனம், இதர தானியங்கள் மற்றும் மேய்ச்சல் அவசியம். உற்பத்திச் செலவில் தீவனச் செலவு சுமார் 75 சதவீதம் இருப்பதால் அடர்தீவனத்துடன் எளிதில் கிடைக்கும் குறைந்த விலை தானியங்களை நாட்டுக்கோழிகளுக்கு அளிப்பதால் உற்பத்தி செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும்.
கோழிகளுக்குத் தேவையான கரையான் உற்பத்தி
கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து ஆகும். கரையான் வெப்ப நாடுகளைச் சேர்ந்த பூச்சியாகும். இது இரவில் மட்டும் செயல்படும் உயிரினமாகும். இது நார்ச்சத்துள்ள பொருள்களை உண்டு வாழும். கரையான் உற்பத்தி செலவே இல்லாத ஒரு தொழில்நுட்ப செயலாகும். கோழிகளை பண்ணைகளில் வளர்க்கும் போது கோழிகளுக்குத் தேவையான புரதச்சத்து தீவனம் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு கரையானை உற்பத்தி செய்து கொடுப்பது அவசியமாகிறது.
கரையானில் கீழ்க்கண்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. புரதம் -36 சதவீதம், கொழுப்பு - 44.4 சதவீதம், எரிசக்தி - 560 கிலோ கலோரி 100 கிராம். இத்துடன் கரையான்களில் வளர்ச்சி ஊக்கிகள் என்னும் உடல் வளர்ச்சிக் பொருள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் அதிகமாகிறது. பறவைகள் பலவிதம் என்பதைப்போல் கரையான்களிலும் பலவிதம் உண்டு. டாம்ப் உட் டெர்மைட் என்னும் ஈரக் கட்டை கரையானை நாம் உற்பத்தி செய்கிறோம். பழைய மண் பானை, கோணிப்பை (சாக்குப்பை), உலர்ந்த மாட்டுச்சாணம், பழைய மரத்துண்டுகள், உலர்ந்த வைக்கோல், மரப்பட்டைகளும் ஒலையும், பழைய துணி போன்றவை கரையான் உற்பத்திக்குத் தேவையான பொருள்கள் ஆகும்.
மேற்கூறிய பொருள்களை வாயகலமான மண்பானையில் அழுத்தி வைத்து சிறிது தண்ணீரைத் தெளித்து வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் கவிழ்த்து வைக்க வேண்டும். மாலை நேரத்தில் இந்தப் பானையை வைத்து விட்டால் காலை நேரத்தில் அதிக அளவில் கரையான்கள் உற்பத்தி ஆகிவிடும். மாலையில் கவிழ்ந்த பானையை காலை நேரத்தில் நேராக நிமிர்ந்து வைத்து விட வேண்டும். இதனை தாய் கோழிகள் உட்கொண்டு நன்றாக வளரும். புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தென்மாவட்டங்களில் கரையான் வளர்ப்பு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. செம்மண் இருக்கும் பகுதிகளில் கரையான் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடை மழை பெய்யும் போது கரையான் உற்பத்தி ஆகாது. எறும்புகள் கரையானுக்கு எதிரி என்பதால் எறும்பு புற்று இருக்கும் இடங்களில் கரையான் உற்பத்தி ஆகாது.
எவ்வாறு விற்பனை செய்வது?
வியாபார ரீதியில் அதிக எண்ணிக்கையில் கோழிக்குஞ்சுகள் பெரிய குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் குறைந்த எண்ணிக்கையில் நாட்டுக்கோழி குஞ்சுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சிறிய இன்குபேட்டர் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்ணையாளர்களின் தேவைக்கேற்ப தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை மாதவரத்தில் இயங்கும் கோழியின ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஓசூர், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி மற்றும் புதுக்கோட்டை, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையம் மூலமாக நாட்டுக்கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சில தனியார் நிறுவனங்களும் நாட்டுக்கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றன. ஒருநாள் நாட்டுக் கோழிக் குஞ்சின் விலை ரூ.30-35 ஆகும்.
விற்பனை வாய்ப்புகள்
பண்ணைப் பராமரிப்பில் வெற்றி என்பது இலாப நட்டத்தை பொறுத்தே அமைகிறது. பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளின் வரவு செலவுகளில் போதுமான கவனம் செலுத்துவதில்லை. கவனக் குறைவின் காரணமாக பண்ணையின் பொருளாதார நிலையை உடனடியாக அறிய முடிவதில்லை. இதனால் ஏற்படும் அல்லது வரவிருக்கும் நட்டத்தையோ இலாபத்தையோ அறிந்து கொள்ள முடியாமல் போகின்றது. இந்நிலையை போக்கவும் இலாபகரமாக பண்ணை தொழில் நடத்தவும் முறையான பொருளாதார கணக்கீடு அவசியம். நாட்டுக்கோழி முட்டைகளுக்கும் அவற்றின் இறைச்சிக்கும் மக்களிடையே கூடுதலான வரவேற்பு இருப்பதால் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. பெரும்பாலான கிராமங்களில் குறிப்பாக பெண்கள் குறைந்த அளவில் 10 முதல் 20 நாட்டுக்கோழிகளை வளர்த்து அவற்றில் கிடைக்கும் நிலையான வருமானத்தை காசு சிறுவாட்டுக்காசு என்னும் சிறுசேமிப்பாகச் சேர்த்து குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். வீட்டில் திடீரென்று ஏற்படும் செலவினங்களுக்கு தங்களிடம் உள்ள நாட்டுக்கோழிகளை விற்று பயன்படுத்துவதால் நாட்டுக்கோழிகளுக்கு நடமாடும் வங்கி என்ற பெயர் பொருத்தமானதாகும். தமிழகத்தில் புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் நாட்டுக்கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.