எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தொழில் வளர்ச்சியில் தமிழகம் பீடு நடைபோடுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டு கூடுதலாக 56 சதவிகிதம் வந்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தொழில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு 6-ம் இடத்தில் இருந்தது. இப்போது அது 2-ம் இடத்துக்கு வந்துள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
சாதகமான சூழ்நிலை...
ஸ்ரீபெரும்புதூர் அருகே செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் 3-வது மிதவை கண்ணாடி ஆலையையும், மற்றும் 2 தொழிற்சாலைகளையும் முதல்வர் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
தொழில்நுட்ப அனுபவத்துடன் கூடிய மனித வளம், தடையில்லா மின்சாரம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், சிறப்பான சட்ட ஒழுங்கு பராமரிப்பு, வெளிப்படையான மற்றும் எளிமையான அணுகுமுறை போன்ற தொழில் தொடங்கத் தேவையான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் அம்மாவின் அரசால் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை பெருக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த தேர்விடமாக உருவாக்கவும், அம்மாவின் அரசு ஆக்கபூர்வமான கொள்கைகளை வெளியிடுதல், திட்டமிடுதல் மற்றும் அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
30 நாட்களுக்குள் அனுமதி
முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் ஒற்றைச்சாளர முறையில் வேண்டிய அனுமதிகள் வழங்கப்படுவதை 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் உறுதி செய்கிறது. 30 நாட்களுக்கு மேலாகும் பட்சத்தில், தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும் ஷரத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய தொழில் தொடங்க தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை சமீபத்தில் அம்மாவின் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
2 வது பெரிய பொருளாதார மாநிலம்
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒரு முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 2017-18ம் ஆண்டில் கூடுதலாக 56 சதவீதம் முதலீடு பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டிற்கு சிறந்த மாநிலமாக சென்ற ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து, 2018ம் ஆண்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பீடுநடை போடுகிறது என்பதை இந்த அறிக்கைகள் உறுதி செய்கின்றன.
தொழில் முதலீட்டாளர் மாநாடு வெற்றி
சென்ற வாரம் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மாவின் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். இதன் காரணமாக, இன்றைய தினம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளும், சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் கோபைன் நிறுவனம் 1665ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக கண்ணாடி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து உலகளவில் ஓர் சிறந்த முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது.“The Customer is King” அதாவது, வாடிக்கையாளரே மன்னர்” என்ற கூற்று செயின்ட் கோபைன் நிறுவனத்திற்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
இதுவரை ரூ.3,400 கோடி முதலீடு
செயின்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டுடன் இதுவரை நான்கு ஒப்பந்தங்களில் பல்வேறு கட்டங்களில் கையொப்பமிட்டு, அதன்மூலம் இதுவரை 3,400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் தனது மூன்றாவது மிதவை கண்ணாடி தொழிற்சாலையை 800 கோடி ரூபாய் முதலீட்டில் 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, அம்மாவின் அரசின் ஒத்துழைப்புடன் மூன்றாண்டு காலத்திற்குள்ளேயே அந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதனை நான் இன்று (நேற்று) துவக்கி வைத்துள்ளேன்.
மழை நீர் சேகரிப்பு
அம்மாவின் ஆணையை ஏற்று இந்த நிறுவனம் இயற்கை வளம் காத்தல், மழைநீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தியதை அம்மா அந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். மேலும், செயிண்ட் கோபைன் நிறுவனம் வளர்ச்சியடைய பலவித ஆலோசனைகளையும் அந்நிகழ்ச்சியில் வழங்கினார் என்பது, நமது அம்மா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையை தெளிவாக காட்டுகின்றது. சென்னை தரமணியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 110 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைந்துள்ள செயிண்ட் கோபைன் ஆராய்ச்சி (இந்தியா) மையத்தை அம்மா 29.1.2016 அன்று துவக்கி வைத்தார் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
பன்னாட்டு முதலீடுகள் தமிழகத்தில் அதிகம்
மேலும், இந்த நிறுவனம் தனது பன்னாட்டு முதலீடுகளில் அதிக அளவில் தமிழ்நாட்டில் தான் செய்துள்ளது என்பதை அறிவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற வாரம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மேலும் 720 கோடி ரூபாயினை தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் செயிண்ட் கோபைன் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது என்பதை அறிவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எவ்வாறு இந்நிறுவனம் செயல்படுத்தியதோ, அதே போன்று, தற்போது அம்மாவின் அரசு 1.1.2019 முதல் அறிவித்திருக்கிற பிளாஸ்டிக் தடை அறிவிப்பினையும் முழுமையாக செயல்படுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.