எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எம்.பி.பி.எஸ்., பிடி.எஸ் ரேங்க் பட்டியல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி நீட்தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதே போல் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் கணபதியை சேர்ந்த இளமதி, சிவமோனிஷ் குமார்,( திருநெல்வேலி) சென்னையை சேர்ந்த அன்புவண்ணன், ஸ்ரீகாந்த், தானியா, பிரியங்காரெட்டி, கோவசக்திமீனாள் , பெங்களுரை சேர்ந்த ஷாலினி ஜெயராமன் ஆகிய மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடத்தில் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கையிடங்களுக்கு பொதுப்பிரிவில் ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 13 மாணவர்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதில் 31 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 741 மாணவர்களும் 19 ஆயிரத்து 612 மாணவியர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 5 சதவீத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 74 பேரும், விளையாட்டு வீரர்களுக்குரிய இடங்களுக்கு 285 மாணவர்களும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளில் 691 பேரும் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இவர்களில் மாநிலப் பாடத்தில் படித்த மொத்த மாணவர்களிந் 23 ஆயிரத்து 291 பேர், சி.பி.எஸ்.இ மூலம் படித்தவர்கள், 9841 பேர், பழைய. மாணவர்கள் 17 , 618 பேர், சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 651 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9 ஆயிரத்து 366 பேர் மாணவர்கள், 16 ஆயிரத்து 285 பேர் மாணவிகள், இவர்களில் பழைய மாணவர்கள் 14 ஆயிரத்து 387 பேர். இம்மாணவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படித்த கடப்பாவை சேர்ந்த மாணவர் ஷோடம் ஸ்ரீநந்தன்ரெட்டி என்ற மாணவர் 685 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மற்ற மாணவர்களும் பெரும்பாலோர் வெளிமாநில மாணவர்களே .
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கவுன்சிலிங் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். முதல் நாளில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும், என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3250 மாணவர் சேர்க்கையிடங்களும் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ கல்லூரியில் 100 இடங்களும் பெருந்துறையில் போக்குவரத்துக் கழகத்தின் கல்லூரியில் 100 இடங்களும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத 13 மருத்துவக் கல்லூரிகளில் 1800 என்று மொத்தம் 5400 எம்.பி.பி.எஸ் சீட்டுக்கள் உள்ளன. இதில் 580 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் 852 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு போக மீதியுள்ள 3 ஆயிரத்து 968 மாணவர் சேர்க்கையிடங்கள் கவுன்சிலிங்குக்கு ஒப்படைக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு அரசு பல்மருத்துவக் கல்லூரியில் நூறு இடங்களில் 15 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதியுள்ள 85 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். இதே சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 80 இடங்களில் 12 அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 68 இடங்கள் கவுன்சிலிங்குக்கு வழங்கப்படும். 17 சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத கல்லூரிகளின் 1760 மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்களில் ஆயிரத்து 70 இடங்கள் கவுன்சிலிங்கில் வரும் 690 மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பப்படும். மொத்தமுள்ள 1940 மாணவர் சேர்க்கையிடங்களில் 1, 213 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். மொத்தமுள்ள 5400 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்களில் 3 ஆயிரத்து 968 இடங்களும் 1940 பி.டி.எஸ் இடங்களில் 1213 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என்று டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.