எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் ரூ. 8 ஆயிரத்து 830 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய பின் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க, தொழில் முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு இன்று(நேற்று) சென்னை திரும்பியிருக்கின்றேன். இங்கிலாந்தில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
1. நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறனை மேலும் மேம்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
2.கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
3.டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வசதியினை மேம்படுத்திட, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செயல்பாடுகளின் நடைமுறைகளை பின்பற்ற அந்நிறுவனத்துடன் ஆலோசனை செய்யப்பட்டது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் என்சன் நிறுவனத்தில் சூரிய சக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை கண்டறிய அந்த நிறுவனத்திற்கு சென்று ஆலோசனை நடத்தப்பட்டது. இங்கிலாந்து அரசுமுறை பயணத்தை முடித்து அமெரிக்கா சென்ற பொழுது, அமெரிக்க நாட்டில் உள்ள பபல்லோ கால்நடை பண்ணையில், கால்நடை வளர்ப்பு மற்றும் அங்குள்ள தொழில்நுட்பங்களை கேட்டறிந்தோம். தமிழகத்தில் சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள மிகப் பிரம்மாண்டமான கால்நடைப் பூங்காவிலே இந்தத் தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவதற்கு அங்கு சென்று பார்வையிட்டோம். அங்கு ஒரு பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கொடுப்பதாக தெரிவித்தார்கள். கிட்டத்தட்ட அந்தப் பால்பண்ணையில் ஒரே இடத்தில் 3,000 பசுக்களை வளர்க்கின்றார்கள். அதில், 60 விழுக்காடு பசுக்களிடமிருந்து பால் கறக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கன்றுகள் வளர்க்கும் முறையை பார்வையிட்டோம். இது ஒரு பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது. நியூயார்க் நகரத்திற்குச் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தன் வாயிலாக ரூபாய் 2,780 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. சுமார் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம், 17,760 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். Haldia Petrochemicals நிறுவனம், Naphtha Cracker Unit- உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கு அந்நிறுவனத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றோம். சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருக்கின்றார்கள், விரைவில் சென்னை வந்து என்னைச் சந்தித்து பேசவிருக்கின்றார்கள். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற திட்டத்தை நான் துவக்கி வைத்துள்ளேன். இத்திட்டத்தின் மூலம், வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் புதிதாக தமிழ்நாட்டில் தொழில் துவங்க இயலும். சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கின்றோம். அதில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படும் போது, 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும். சான் ஹீசே நகரிலும் “யாதும் ஊரே” திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் Digital Accelerator திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 50 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மின்சாரத்தில் இயக்கப்படும் கார் தயாரிக்கும் தொழிற்சாலையான டெஸ்லா நிறுவனத்தைப் பார்வையிட்டு, தமிழகத்தில் அந்தத் தொழிற்சாலை வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம். அவர்களும் பரிசீலிப்பதாகவும், விரைவில் தமிழ்நாட்டிற்கு வந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மாசில்லா எரிசக்தி தயாரிக்கும் ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தைப் பார்வையிட்டோம். அந்நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வோம்.
லாஸ் ஏஞ்சல்ஸ், Anaheim நகரின் மேயரை சந்தித்து கழிவுநீரை சுழற்சி முறையில் எவ்வாறு சுத்திகரிக்கின்றார்கள், அந்நீரை எந்தளவிற்கு பயன்படுத்துகின்றார்கள், அதற்காக என்னென்ன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் பார்வையிட்டோம். அது எவ்வாறு தமிழகத்தில் பயன்படும் என்பதையெல்லாம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினோம். இந்த மறுசுழற்சி முறையை தமிழகத்தில் உருவாக்கி செயல்படுத்துவதற்கு தாங்கள் துணை நிற்பதாக மேயர் தெரிவித்திருக்கின்றார். துபாயில், தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூபாய் 3,750 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கின்றோம். இதில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 10,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. துபாய் தொழில்முனைவோர்களை தொழில் துவங்க தமிழகத்திற்கு அழைத்திருக்கின்றோம். பெரும்பாலான தொழிலதிபர்கள், தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்கள். அவர்களுக்குத் தேவையான மின்சார வசதி, சாலை வசதி, தண்ணீர் வசதி இருக்கின்றது. மேலும், Single Window System மூலமாக அனைத்து அனுமதியும் ஒரே காலக்கட்டத்தில் கிடைப்பதற்குண்டான வழிவகைகளையும் செய்து கொடுப்போம் என்று தெரிவித்திருக்கின்றோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு முதலீட்டை ஈர்த்திருக்கின்றோம். பல முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வந்து புதிய தொழில் துவங்க ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் ரூபாய் 8,830 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதனால், 37,300 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள். அவ்வழியில், அம்மாவின் அரசும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், துரைகண்ணு, கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாபா பாண்டியராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். இதேபோல் விமான நிலையத்தில் ஏராளமான அ.தி.மு.க. வினர் திரண்டு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரை வரவேற்கும் வகையில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நள்ளிரவு வேளையிலும் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். தொண்டர்களின் வரவேற்பை நீண்ட தூரம் நடந்து சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.