முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பிப்ரவரி 1-ம் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியன் ஆயில் நிறு வனத்தின் சமையல் கியாஸ் சிலின்டர் பெறும் வாடிக்கையாளர்கள் தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தற்போது கியாஸ் சிலிண்டர்கள் முன்பதிவு செய்த 3 நாட்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு கியாஸ் சிலிண்டர் மட்டுமே வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கியாஸ் தீர்ந்ததும் முன்பதிவு செய்து புதிய சிலிண்டர் வரும் வரை சிரமப்படுகிறார்கள். இவர்களுக்காக முன்பதிவு செய்த உடனே கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்ய 'தட்கல்' முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'தட்கல்' முறையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த நாளிலேயே அவர்களின் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும். குறிப்பாக 'தட்கல் எல்.பி.ஜி. சேவா' மூலம் முன்பதிவு செய்த அரைமணி நேரத்தில் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வந்துவிடும்.

ஆனால் தட்கல் முறையில் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தட்கல் முறையை பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து