எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அதிரடி சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்காக விளையாடினார். 2020 ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 288 ரன்கள் எடுத்தார். 2021-இல் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125.32. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது., கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் சென்ற விதத்தைப் பார்க்கும்போது நான் சரியாக நடத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் நிறைய பங்களிப்பை அளித்தபோதும் உரிய மரியாதை கிடைக்கவில்லை. எனவே, சரி இருக்கட்டும் என ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழையாமல் இருப்பது பற்றி கவலை கொள்ளாமல் அதை அப்படியே விட்டுவிட்டேன் என்றார்.
___________________
கேப்டனாக தான் தேர்வாகதற்கு யுவராஜ் சிங் கூறும் காரணம் ?
இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கால் வர முடியவில்லை. 2007 டி20 உலக கோப்பையில் அவருக்கு பதில் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சாப்பல் பதவி வகித்தபோது பல சர்ச்சைகள் வெடித்தன. அப்போது, சச்சின் சார்பாக தான் இருந்ததாகவும் எனவே, சில பிசிசிஐ அலுவலர்கள் தன்னை கேப்டனாக்குவதை விரும்பவில்லை என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.
சாப்பலின் பல முடிவுகள் இந்திய அணியின் வீரர்களுக்கு அசெளகரியத்தை அளித்தது. இப்பிரச்னையில், தான் எடுத்த முடிவுதான், கேப்டன்சி பொறுப்பு தனக்கு வராததற்கு காரணம் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு அளித்த நேர்காணலில், "நான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அப்போது கிரெக் சேப்பல் சம்பவம் நடந்தது. சேப்பல் பக்கமா அல்லது சச்சின் பக்கமா என்றாகிவிட்டது. சச்சினுக்கு ஆதரவு அளித்த ஒரே வீரர் நான்தான் என்று தெரிவித்துள்ளார்.
_______________
3-வது முறையாக முதல் பந்திலே டக் அவுட்டான விராட் கோலி..!
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் - விராட் கோலி களமிறங்கினர். நடப்பு தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்ம்-யில் இருக்கும் கோலி இந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார். ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 3-வது முறையாக அவர் கோல்டன் டக் (முதல் பந்தில் )அவுட்டாகி உள்ளார்.
_______________
ஹங்கேரி சைக்கிள் பந்தயம்: இங்கிலாந்து வீரர் வெற்றி
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில், “கைரோ டி’இட்டாலியா” சைக்கிள் பந்தயத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 9.2 கி.மீ. தூரத்திற்கான 2-வது சுற்று சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தனித்தனியாக பங்கேற்ற நிலையில், இங்கிலாந்து வீரர் சைமன் யார்ட்ஸ், பந்தய தூரத்தை 11 நிமிடங்கள் 50 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்து அசத்தினார்.
_______________
விராட் கோலி சிறந்த வீரர்: பாக்.முன்னாள் வீரர் கருத்து
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது போட்டியில் அவர் அரைசதம் அடித்தார். நேற்றைய போட்டியில் அவர் மீண்டும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோலி குறித்து அவர் கூறுகையில், "விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் நிரூபிக்க எதுவும் இல்லை. அவர் களத்திற்கு சென்று விளையாட்டை அனுபவித்து விளையாட வேண்டும். அவர் ரன்களை எடுக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். அவர் தற்போது மோசமான பேட்டிங் ஆடுவதற்கு காரணம் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால் ஐபிஎல்-லில் அதை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். மனிதர்கள் தோல்வி அடைவார்கள். ஆனால் விராட் போன்ற ஜாம்பவான்கள், தோல்விகளுக்குப் பிறகு வலுவான கம்பேக் கொடுப்பார்கள் என அக்தர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்