எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்றது.
இந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து , சீனாவின் சென் யூ பெய் ஆகியோர் மோதினர் பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய்-யிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.இதனால் பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: இந்தோனேசியாவில் இந்திய அணி
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றது. பெங்களூரு, 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 24-ந் தேதி ஜப்பானையும், 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 26-ந் தேதி இந்தோனேசியாவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான பிரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய ஹாக்கி அணி பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றது. முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா அளித்த பேட்டியில், 'ஆசிய கோப்பை போட்டி மதிப்புமிக்கதாகும். இந்த போட்டிக்கான நமது அணியினர் நன்கு தயாராகி இருப்பதுடன் உற்சாகமான மனநிலையில் உள்ளனர். பெங்களூருவில் நடந்த எங்களது பயிற்சி முகாம் கடினமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்த விரும்புகிறோம் என்றார்.
இளம் பவுளரை பாராட்டிய சென்னை அணி கேப்டன்...!
“சென்னை வீரர்கள் ஆட்டம் எப்படி முடிந்தாலும், அவர்கள் அதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள். அதில் மிகப் பெரிய உதாரணங்களில் ஒன்று முகேஷ். அவர் எல்லா கேம்களிலும் விளையாடினார், ஆனால் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை அவர் எப்படி முன்னேறினார் என்று பார்ப்பது சுவாரஸ்யமானது. அவர் டெத் ஓவர்களின் போது சிறப்பாக பந்து வீச முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வீரர்களிடமிருந்து விரும்புகிறோம். அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றவுடன், அடுத்த ஆண்டு முதல் மீண்டும் புதிதாக தொடங்க வேண்டாம். இளைஞர்களிடமிருந்து அதுதான் தேவை, அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எங்கள் மலிங்கா (மதீஷா பத்திரனா), அவர் உண்மையிலேயே நல்லவர். அவரைத் தேர்ந்தெடுப்பது கடினம், அடுத்த ஆண்டு அவர் எங்களுக்கு பெரிய அளவில் பங்களிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார் டோனி.
மீண்டும் சர்ச்சை வர்ணனை: சுனில் கவாஸ்கருக்கு சிக்கல்
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ஷிம்ரோன் ஹெட்மயர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 12 ஆட்டங்களில் 297 ரன்கள் சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி நிவானிக்கு குழந்தை பிறந்ததால் ஹெட்மயர் தாயகம் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்.
தற்போது மீண்டும் விளையாடி வரும் அவரை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவரை வர்ணனை செய்த விதம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''ஹெட்மையரின் மனைவிக்கு இப்போது தான் டெலிவரி ஆனது. அவர் மனைவி டெலிவரி செய்துவிட்டார்; ஹெட்மையர் பேட்டிங்கில் டெலிவரி செய்வாரா? என்று பார்க்கலாம்'' என்று கவாஸ்கர் கமெண்டரி செய்தார். சுனில் கவாஸ்கரின் இந்த கமெண்டரிக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு நியூசிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது.
இதில் நியூசிலாந்து-கவுண்டி அணியான சஸ்செக்ஸ் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் ஹோவ் நகரில் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்து அணியினருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹென்றி நிகோல்ஸ், வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் ஜூர்ஜென்சென் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.