முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Medicines 2022 07 02

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் வரும் 21-ம் தேதி கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 2021,  ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரண்டு தவணை செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 33 முகாம்கள் நடைபெற்றுள்ளன.  34-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து