முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      இந்தியா
UP-Boot 2022 01 12

Source: provided

பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சுமார் 40 பேர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து