முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடுக்கப்பட்ட மக்களை காத்தவர் அய்யா வைகுண்டர்: கவர்னர் ரவி

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை : அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில்,  அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர். 

ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும். இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து