எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினைக் கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கும் காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற பல்வேறு சீரிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை வளர்த்திடும் வகையில் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
படித்த திறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் போது, அமெரிக்க நாட்டின் சிகாகோவில், பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
சிகாகோவில் பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்சிகாகோவில் பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். பிஎன்ஓய் மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இந்த வங்கிக்கு பல கிளைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். பிஎன்ஓய் மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஓய் மெலன் வங்கியின் துணைத் தலைவர் செந்தில் குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 5 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 2 days ago |
-
டைமண்ட் லீக் இறுதி சுற்று: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி
15 Sep 2024பிரஸ்சல்ஸ் : டைமண்ட் லீக் இறுதி சுற்றில் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
துலீப் கோப்பை டெஸ்ட் தொடர்: இந்தியா ஏ அணி வெற்றி
15 Sep 2024பெங்களூரு : துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் கட்ட...
-
ஓய்வு குறித்து நான் எதுவும் யோசிக்கவில்லை: அஸ்வின்
15 Sep 2024சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
-
பாக். முதல் பெண் நடுவர்
15 Sep 2024சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்தியாஸ் தேர்வாகியுள்ளார். இவர் இனிவரும் காலங்களில் சர்வதேச மகளிர் இருதரப்பு மற்றும் ஐ.சி.சி.
-
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதி: இந்தியா- தென் கொரியா இன்று மோதல்
15 Sep 2024ஹூலுன்பியர் : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை திடீர் உயர்வு
16 Sep 2024சென்னை, எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2024
16 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2024
16 Sep 2024 -
முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக கோரிக்கை மனு
16 Sep 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் வி.சி.க.
-
6.6 ரிக்டர் அளவில் கனடாவில் நிலநடுக்கம்
16 Sep 2024போர்ட் மெக்நீல், கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் ராகுல்
16 Sep 2024புதுடெல்லி, ராகுல்காந்தி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார்.
-
பூமியை சுற்றும் புதிய மினி நிலவு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
16 Sep 2024வாஷிங்டன், பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து
16 Sep 2024சென்னை, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழக மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசின் செயலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
16 Sep 2024சென்னை, தமிழக மீனவர்களுக்கு மொட்டை போட்ட இலங்கை அரசின் கொடூர செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியிலான கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
16 Sep 2024சென்னை, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார
-
ராமசாமி படையாட்சியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
16 Sep 2024சென்னை, ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
முல்லைப்பெரியாறு அணை குறித்து பேச்சு: கேரள மாநில அரசியல் கட்சிகளை கண்டித்து செப். 22-ல் போராட்டம்
16 Sep 2024கூடலூர், முல்லைப்பெரியாறு அணை குறித்த பேச்சு:கேரள அரசியல் கட்சியினரை கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
16 Sep 2024மேட்டூர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
2-வது முறையாக கொல்ல முயற்சி: டொனால்டு ட்ரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
16 Sep 2024ப்ளோரிடா, அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்
-
பெண்கள் கை காட்டியும் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட்
16 Sep 2024குமரி, பெண்கள் கை காட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
மியான்மரில் புயல்: 113 பேர் உயிரிழப்பு
16 Sep 2024பாகோ, மியான்மரில் ஏற்பட்ட புயலுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விடுதி அறையில் மாட்டிறைச்சி சமையல்: 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
16 Sep 2024பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்
-
மதுஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாக உறுதி: தி.மு.க.-வி.சி.க. உறவில் எந்த விரிசலும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
16 Sep 2024சென்னை, “தி.மு.க. - வி.சி.க. இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம்.
-
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில் பெயர் மாற்றம்
16 Sep 2024குஜராத், குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
-
நடிகர் சித்தார்த் - அதிதி திருமணம்
16 Sep 2024ஐதராபாத், நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.