எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில்,
"இது வெறும் முதல் போட்டிதான். எனவே அதில் சந்தித்த தோல்வியைப் பற்றி நான் அதிகமாக சிந்தித்து ஆராயப் போவதில்லை. பவர் பிளே என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். முதல் சீசனில் மோஷின் கான் எங்களுடைய பவர் பிளே பவுலராக இருந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் பிட்டாக இல்லை. இம்முறை அவரும் நவீனும் சேர்ந்து மீண்டும் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்த இலக்கு எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பந்து வீசியும் சில தவறுகளை செய்தோம். அதிலிருந்து நாங்கள் பாடங்களையும் கற்றுள்ளோம். ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தும் நாங்கள் 194 ரன்களை நெருங்கியதே எங்களுடைய பேட்டிங் வரிசையின் தரத்தை பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். இங்கிருந்து நாங்கள் எப்படி வலுவாக மாற முடியும் என்பதை பற்றி பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
_____________________________________________
புள்ளி பட்டியலில் மாற்றம்
இலங்கை - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. அதில் வங்காளதேசத்தை 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் கடைசி இடத்தில் இருந்த இலங்கை கிடுகிடுவென முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது. 4-வது இடத்தில் இருந்த வங்காளதேசம் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்., 1. இந்தியா - 68.51 சதவீதம் , 2. ஆஸ்திரேலியா- 62.50 சதவீதம் , 3. நியூசிலாந்து - 50.00 சதவீதம் , 4. பாகிஸ்தான் -36.66 சதவீதம் , 5. வெஸ்ட் இண்டீஸ் - 33.33 சதவீதம் , 6. இலங்கை - 33.33 சதவீதம் , 7. வங்காளதேசம் - 33.33 சதவீதம் , 8. தென் ஆப்பிரிக்கா - 25.00 சதவீதம் , 9. இங்கிலாந்து - 17.5 சதவீதம்
_____________________________________________
பாண்ட்யாவுக்கு கவாஸ்கர் கேள்வி?
ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது. குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.
ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர். பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.
_____________________________________________
கமிந்து மெண்டிஸ் புதிய சாதனை
இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 7-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் 102 ரன்கள் விளாசினார். தனஞ்ஜெயா டி சில்வா உடன் சேர்ந்து 202 ரன்கள் சேர்த்தார். தனஞ்ஜெயா டி சில்வாவும் (102) சதம் விளாசினார். 2-வது இன்னிங்சில் மீண்டும் தனஞ்ஜெயா டி சில்வா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த முறை 8-வது வீரராக களம் இறங்கிய 164 ரன்கள் விளாசினார்.
இந்த இன்னிங்சிலும் தனஞ்ஜெயா டி சில்வா (108) சதம் விளாசினார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 7-வது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் தனஞ்ஜெயா டி சில்வா- கமிந்து மெண்டிஸ் ஆகிய இரண்டு பேரும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 3-வது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கிரோக் சேப்பல்- கிரேக் சேப்பல், மிஸ்பா-உல்-ஹக்- அசார் அலி ஜோடி இந்த சாதனையைப் படைத்துள்ளது.
_____________________________________________
பாண்ட்யாவுக்கு லாரா யோசனை
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் வீசுவதற்காக வந்தபோது அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் சேர்ந்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்கு இந்தியாவுக்காக பாண்டியா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு. கெவின் பீட்டர்சன்: "கேப்டனாக இருக்கும் பாண்ட்யா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை. பிரையன் லாரா: "இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை இங்கே விளையாடும்போது" என்று பாண்ட்யாவை கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இதற்கு கெவின் பீட்டர்சன் மற்றும் இயன் பிஷப் இருவரும் சிரித்தார்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.