முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      இந்தியா
Mainipur-CRPF-2024-04-27

பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள். 

நாடு முழுவதும் 2-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது.  மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். எனினும், மணிப்பூரில் நேற்று முன்தினம் நடந்த 2-வது கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது என மணிப்பூரின் தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் கூறியுள்ளார்.  

 

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு 2.15 மணியளவில் குகி பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தது.  இந்த சம்பவத்தில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து