முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க வேண்டும் : அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரிதாய் பெற்ற மனித பிறவியை போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றாலும், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் பெற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.

கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு விடுபட்டிருக்கின்ற நிலையில், கேரளாவில் நிபா தொற்று காரணமாக 14-வயது சிறுவன் உயிரிழந்தார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரத்தினையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. இது மட்டுமல்லாமல், அந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்தச் சிறுவனின் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுமாறும், பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டு இருந்தாலும், அந்த வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

எனவ, கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் யாருக்காவது நிபா வைரஸ் தொற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையினை அளிக்க வேண்டுமென்றும்; கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருவேரை பரிசோதனை செய்து அதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே அவர்களை அனுமதிக்க வேண்டுமென்றும்; அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும்; இந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தி.மு.க. அரசை அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து