முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24-க்கு விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 48-வது முறையாக அண்மையில் நீட்டிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து