எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
கூட்டத் தொடர்...
பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
அல்வா தயாரித்து...
2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிதியமைச்சர் வழங்கினார்.
அனைத்துக்கட்சி...
இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. பாராளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
7-வது முறையாக....
இதனை அடுத்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்கவுள்ளார்.
சாதனையை....
இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் 2-வது பதவிக் காலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின் தொடர்ந்து 4 முழு பட்ஜெட்களையும், நிகழாண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்தார்.
புதிய அறிவிப்புகள்....
இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட். இந்த பட்ஜெட் குறித்து தொழில்துறையினரும், சாமானிய மக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். வரி செலுத்துவோர் வரிச்சலுகையை எதிர்பார்க்கும் நிலையில், தொழில் துறையினரும் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா ? என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்னதாக, 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை, மத்திய நிதிநிலை அறிக்கையில் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2024
15 Oct 2024 -
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை : பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு
15 Oct 2024சென்னை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
15 Oct 2024சென்னை, தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
-
கேரள கடற்கரை பகுதிகளுக்கு இன்று இரவு வரை ரெட் அலர்ட்: மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்
15 Oct 2024திருவனந்தபுரம், கேரள கடலோர பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 11.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
தூய்மைப் பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
15 Oct 2024சென்னை, தூய்மை பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு
15 Oct 2024புது டெல்லி, கனடாவில் உள்ள இந்திய தூதரை திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்
-
பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம்: துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்
15 Oct 2024சென்னை, பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
வயநாடு பார்லி. தொகுதிக்கு நவ. 13-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
15 Oct 2024புது டெல்லி, பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
15 Oct 2024காசா, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள பெனி சுஹைலா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவ
-
கனமழை தொடர்பாக பெறப்பட்ட 249 புகார்களில் 215-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது: தமிழக அரசு
15 Oct 2024சென்னை, கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300 நிவாரண மையங்களும்,
-
மழை மீட்பு பணி: காவல் கட்டுப்பாட்டு அறையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு
15 Oct 2024சென்னை, மழை மீட்பு பணிக்காக அமைக்கப்பட்ட காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர்: கலாமை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
15 Oct 2024புது டெல்லி, அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றார் என்று அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
-
சந்திக ஹதுருசிங்க சஸ்பெண்ட்
15 Oct 2024வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.
-
உலகத்தரம் வாய்ந்த வீரர்: விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம்
15 Oct 2024பெங்களூரு : உலகத்தரம் வாய்ந்த வீரர் விராட் கோலிக்கு இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுற்றுப்பயணம்...
-
பத்திரிகை சுதந்திரத்தை காக்க போராடியவர்: மறைந்த தினபூமி நாளிதழின் ஆசிரியருக்கு டி.யு.ஜே. புகழாரம்
15 Oct 2024சென்னை : தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் அகால மரணம் அடைந்தார் என்கின்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
-
புயல் மழையால் திருப்பதியில் இன்று வி.ஐ.பி தரிசனம் ரத்து
15 Oct 2024திருப்பதி, புயல் மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை
15 Oct 2024திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என அறிவிப்பு
15 Oct 2024சென்னை, தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: இங்கிலாந்து ஆய்வில் தகவல்
15 Oct 2024லண்டன், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பேர் தொழில் வல்லுநர்களாக இருக்கிறார்கள் என பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
15 Oct 2024புதுச்சேரி : கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உலக விண்வெளி விருது பெற்றார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
15 Oct 2024பெங்களூரு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் 2024-ம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக விண்வெளி விருதினை பெற்றுள்ளார்.
-
திறமை வாய்ந்தவர்: ஜெய்ஸ்வாலுக்கு ரோகித் பாராட்டு
15 Oct 2024பெங்களூரு : இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என ரோகித் சர்மா பாராட்டி உள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரிப்பு
15 Oct 2024சென்னை : செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்
15 Oct 2024சென்னை, சென்னை விமானநிலையத்தில் புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
-
மகராஷ்டிர சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல்: ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு
15 Oct 2024புது டெல்லி, மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20 என இர