முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் தொடக்க விழா திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 புதிய பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ''தமிழகதத்தில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி தமிழகத்தில் 7,200 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு அதில் முதல் கட்டமாக 1,000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

ஆனால், சில எதிர்கட்சிகள் புதிய பேருந்து வரவில்லை என கூறுகின்றனர். அவர்களின் பார்வைக்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி விட்டனர். சுமார் 2 ஆயிரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்யபட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக் கழகம் கடுமையான நிதிச்சுமையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

தற்போது திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் புத்துயிர் பெற்று வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர்கள், நடத்துநர்களின் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகத்திலும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும். போக்குவரத்துத் துறையில் மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் மகத்தான திட்டம். இந்த திட்டம் மூலம் போக்குவரத்துத் துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

முதலில் இத்திட்டத்துக்கு ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.2,800 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்ததால் தான் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் மற்றும் நடத்துநர்களுக்கு 1-ம் தேதியே சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது அரசு போக்குவரத்து தனியார் மயமாக போகிறது என வதந்தி பரப்பி வரப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் இயங்குகிறது. இதில் 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இதுபோல எந்த மாநிலத்திலும் கிடையாது என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து