முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு : பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Mamata-1

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மம்தா பானர்ஜி,  கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியதாக குற்றஞ்சாட்டினார். 

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இண்டியா கூட்டணியை சேர்ந்த மாநில முதல்வர்கள்   பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது. இதனால் வெளிநடப்பு செய்துள்ளேன். பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி முதல்வர்கள்  10 முதல் 20 நிமிடம் வரை பேசினார்கள். சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்கள் வரை பேசினார். 

அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள்  10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களில்  நான் மட்டுமே பங்கேற்றேன். 

ஆனாலும் நிதி ஆயோக் கூட்டத்தில் என்னிடம் பாரபட்சம் காட்டினார்கள். வெறும் 5 நிமிடம் மட்டும் எனக்கு பேச வாய்ப்பளித்தனர். 5 நிமிடத்துக்கு மேல் பேசிய போது மைக்கை ஆப் செய்தனர். இதனால் எதற்கு என்னை தடுக்கிறீர்கள்? ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? 

நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் கட்சியின் முதல்வர்கள், கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கி என்னை புறக்கணிக்க கூடாது. 

இது மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும். இது நியாமற்றது என்று கூறினேன். எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வராக நான் மட்டுமே பங்கேற்றேன். இதற்கு காரணம் கூட்டாச்சி முறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான். 

ஆனால் பட்ஜெட்டில் அரசியல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிற மாநிலங்கள் மீது ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். மேலும் நிதி ஆயோக்கிற்கு நிதி சார்ந்த அதிகாரம் இல்லை. பிறகு எப்படி இது இயங்கும்? 

நிதி ஆயோக்கிற்கு நிதி அதிகாரத்தை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பழைய திட்ட கமிஷனையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறினேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து