எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 29 - தேர்தல் நடைபெறும்போது மாநில அரசு அதிகாரிகளை மாற்ற தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு, இதுகுறித்து மாநில அரசுக்கு தகவல் தர அவசியமில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனையை எதிர்த்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தாமாக முன்வந்து எடுத்த `சூமோட்டோ' வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் முதன்மை பெஞ்ச் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வாகன சோதனையில் இதுவரை பறிமுதல் செய்த 23 கோடி ரூபாயை திரும்ப கேட்டு யாரும் வரவில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பரபரப்பு தகவலை கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாகன சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறது. ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படை அதிகாரிகல் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கிறார்கள். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையின் தொடர் நடவடிக்கை காரணமாக தேர்தலில் பணநடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க நினைக்கும் அரசியல்கட்சிகள் திண்டாடி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறினார். அதேபோல் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் கருணாநிதி பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தார். அதன் மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தனது மனுவில் வாகனங்களில் மக்கள் கொண்டு செல்லும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியிருந்தார்.
கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். நம்பகமான தகவல் அடிப்படையில்தான் தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். அன்றைய தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டில் தேர்தல் ஆணைய பறக்கும்படை அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை நடத்தியும் எதையும் கைப்பற்றப்படவில்லை என்பது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. கே.பி.பி.சாமி சார்பில் வழக்கறிஞர் விடுதலை ஆஜரானார். தில்லை நடராஜன் தொடர்ந்த வழக்கோடு கே.பி.பி.சாமியின் வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. அதேபோல் டி.ஜி.பி. இடமாற்றம் குறித்தும் அன்றைய தினமே விசாரிக்கப்பட்டது. அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், இந்த வழக்குகளில் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேரணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். அவர் பேசும்போது, தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வேண்டும். அந்த அதிகாரத்திற்கு இடையூறாக இருந்த போலீஸ் அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். நாளொரு மேனியாக பண பறிமுதல் செய்யப்படும் செய்திகள் தொலைக்காட்சிகள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை தமிழகத்தில் 23 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். அதை திரும்ப கேட்டு இதுவரை யாரும் வரவில்லை. இதுபோன்ற சமயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு குறிப்பிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசும்போது, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் என்னென்ன விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றுகிறதோ அதைத்தான் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது என்று கூறினார். தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் கூறும்போது, தேர்தல் ஆணையத்தால் சரிவர தனது பணியை செய்ய முடியாத காரணத்தால் தான் டி.ஜி.பி. லத்திகாசரனை தன்னிச்சையாக இடமாற்றம் செய்ய வேண்டியது இருந்தது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் நடத்தும் வாகன சோதனையை எதிர்த்து கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை ஐகோர்ட் நீதிபதிகள் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து `சூமோட்டோ' வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது நம்பகமான தகவல்கள் இல்லாமல் வாகன சோதனை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு சர்ச்சையையும் உருவாக்கியுது. ஐகோர்ட் நீதிபதிகள் ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் பற்றி தமக்கு தாமாகவே முன்வந்து சூமோட்டோ ரிட் பெட்டிஷனை எடுத்துக்கொண்டு விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் அப்படி சூமோட்டோ வழக்கை எடுப்பதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் நெறிமுறைகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை மற்றும் விதிகளுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்.
ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சூமோட்டோ வழக்காக எடுப்பதாக இருந்தால் அதை தலைமை நீதிபதியின் பார்வைக்கு எடுத்துச் சென்று வழக்கின் தன்மை குறித்து தீவிர ஆய்வு செய்த பின்னரே அதை சூமோட்டோ வழக்காக எடுக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.
மேலும் சூமோட்டோ வழக்கின் தன்மையானது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் மற்றும் ஐகோர்ட் நெறி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் கமிஷனின் வாகன சோதனை குறித்து நீதிபதிகல் எலிப்பி தர்மராஜ், எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் எடுத்துக் கொண்ட சூமோட்டோ வழக்கு குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சி நேற்று விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரணை நடத்தியது. அவர்கள் சூமோட்டோ வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’ராபர்’
02 May 2024சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'.