எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 4 - மதுரையில் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பூரண கும்பத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரை காளவாசலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பேச்சை கேட்பதற்காக அந்த பகுதியில் அலைகடலென மக்கள் திரண்டிருந்தனர். கோடை வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளம்போல் திரண்டு ஜெயலலிதாவின் பேச்சை கேட்டார்கள். முன்னதாக நேற்றுமாலை 4-15 மணி அளவில் ஜெயலலிதா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அவரை பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கழக செயலாளர்கள் செல்லூர் கே.ராஜூ, எம்.முத்துராமலிங்கம் வேட்பாளர்கள் ஏ.கே.போஸ், கா.தமிழரசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா பிரசார வேனில் ஏறி வெளியே வந்தார். அவருக்கு நத்தம் ரோட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா பிரசார வேனில் தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் வந்தார். அங்கு கைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் கேட்டுக்கொண்டனர். பின்னர் கைலாசபுரம்,ஈ.எஸ்.ஐ. பாத்திமா கல்லூரி சந்திப்பு வழியாக தீக்கதிர் அலுவலகம் பெத்தானியபுரம் பகுதியை வந்தடைந்தார். அங்கு கட்டிட சங்க தொழிலாளர்கள், வெள்ளையடிக்கும் தொழிலாளர்கள், சுண்ணாம்பு காளவாசலில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், ஒர்க்ஸ்ஷாப்பில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருபுரமும் திரண்டு நின்று இரட்டை விரலை காண்பித்து தங்களது ஆதரவை வரவேற்பின் மூலம் தெரிவித்தனர். பின்னர் காளவாசலை வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்கள் சாட்டை அடித்தும் பெண்கள் உருமி அடித்தும் ஆட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன் பின்னர் காளவாசலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் மதுரை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைபாண்டி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைச்செயலாளர் சி.தங்கம், இணைச்செயலாளர் குமுதா, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அணி செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், ஷ.ராஜலிங்கம், கா.டேவிட் அண்ணாதுரை, வையைமாரி, பகுதிகழக செயலாளர்கள் கே.ஜெயவேல், தளபதி ஆர்.மாரியப்பன், பூமிபாலகன், அண்ணாநகர் என். முருகன், தொகுதி கழக செயலாளர்கள் மேற்கு எஸ். மாரியப்பன், மத்தி எஸ்.குமார்,வடக்கு எம்.ரவிச்சந்திரன், தெற்கு எம்.ரவீந்திரன், வடக்குத்தொகுதி இணைச்செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பேங்க் மாரியப்பன், மேற்குதொகுதி இளைஞரணி செயலாளர் ஆட்டோ விஜயன், மாவட்ட பேரவை துணைத்தலைவர் புதூர் அபுதாகீர், வடக்கு 1-ம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி, மத்திய 1-ம் பகுதி இளைஞரணி செயலாளர் கே.எஸ்.சஷிகுமார், தொகுதி கழக இணைச்செயலாளர் செல்லூர் எம்.எஸ்.சுப்பு, மகளிரணியை சேர்ந்த தேனம்மாள், தெய்வம் கணபதி, கேசவ பாண்டியம்மாள், புதூர் பாப்பா, ஆர்.ஜோதி, எம்.கல்யாணி, பி.புஷ்பா, வேலம்மாள், டி.ஜெயபாக்கியம், எம்.செல்வி, கணபதி, பாண்டியம்மாள், தலைமைகழக பேச்சாளர் அழகரடி ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா காளவாசலில் இருந்து புறப்பட்டு அரசரடி,புதுஜெயில்ரோடு, கிரம்மர் புரம், கரிமேடு, மதுரா கோட்ஸ் மேம்பாலம், சிம்மக்கல், யானைக்கல், வழியாக சென்றார். அந்த பகுதியில் அவருக்கு ரோட்டின் இருபுறமும் இருந்து பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் யானைக்கல், கல்பால மேம்பாலம், கோரிப்பாளையம் தேவர் சிலை தல்லாகுளம், அழகர்கோயில் ரோடு வழியாக சங்கம் ஓட்டலை அடைந்து ஜெயலலிதா நேற்று இரவு அங்கு தங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.