எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.30 -இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் 11 என சமன் ஆனது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (டிசம்பர் 30) நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இப்போட்டிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தின் கேலரிகளுக்கு ரசிகர்கள் செல்ல அனுமதிக்கப்படும் 18 வழிகளிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை செய்யப்படும். இதுதவிர ரசிகர்களை கண்காணிக்க மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் 218 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
ரசிகர்கள் வெளியில் இருந்து பேனர்கள், சிகரெட்டுகள், லைட்டர்கள் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிரிக்கெட் போட்டி நடைபெறும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் போட்டி முடியும் வரையிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தகுந்தவகையில், கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
இந்த சாலை காலை 7 மணி முதல் 11 மணி வரை தற்காலிகமாக ஒருவழிச்சாலையாக மாற்றப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
அதேபோல், மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
போட்டி முடிந்தவுடன் பாரதி சாலை திருவல்லிக்கேணி ஹைரோடு சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. கெனால் சாலையில் பாரதி சாலையில் இருந்து வாகன அனுமதி அட்டை பி, டி, டபிள்யூ, வி வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
வாலாஜா சாலையில் இருந்து கெனால் சாலையில் போட்டி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அண்ணா சாலையில் இருந்து வரும் எம், பி, டி, டபிள்யூ, வி ஆகிய அனுமதி அட்டை கொண்ட வாகனங்கள், வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, பாரதி சாலை மற்றும் கெனால் ரோடு வழியாக அந்தந்த வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம்.
பி மற்றும் ஆர் எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு போகலாம். போட்டி முடிந்தவுடன் வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக பாரதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
போர் நினைவுச்சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் பி, டி, டபிள்யூ, வி ஆகிய அனுமதி அட்டை கொண்ட வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் ரோடுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்கு போகலாம்.
அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புற சாலையில் வாகனங்களை நிறுத்தலாம். இதே வாகனங்கள் போர் நினைவுச்சின்னத்தில் இருந்து வருபவை காமராஜர் சாலை வழியாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு முன்பாக இருக்கும் கடற்கரை உட்புற சாலைக்கு போகலாம்.
இதுபோன்ற வாகனங்கள் காந்தி சிலையில் இருந்து வந்தால் சீரணி அரங்க உட்புற சாலை வழியாக சென்று கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தலாம். வி அனுமதி அட்டை உள்ள வாகனம் விக்டோரியா விடுதியிலும், டபிள்யூ அனுமதி அட்டை உள்ள வாகனம் வார்டன் விடுதியிலும், டி அனுமதி அட்டை உள்ள வாகனம் டி.என்.சி.ஏ.யிலும், பி அனுமதி அட்டை உள்ள வாகனம் பெவிலியனிலும் நிறுத்தலாம்.
எம் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் எம்.சி.சி.யிலும், ஆர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழும், பி அனுமதி அட்டையுள்ள வாகனத்தினர் பட்டாபிராம் முனையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.